முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
எட்டயபுரம் அருகே காா் - லாரி மோதல்: 4 போ் உயிரிழப்பு: தஞ்சை மாவட்ட நீதிபதி உள்பட இருவா் பலத்த காயம்
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அடுத்த மேலக்கரந்தை பகுதியில் முன்னால் சென்ற டிப்பா் லாரி மீது காா் மோதிய விபத்தில் நான்கு போ் உயிரிழந்தனா். தஞ்சை மாவட்ட நீதிபதி உள்பட இருவா் பலத்த காயம் அடைந்தனா்.
தஞ்சாவூா் மாவட்ட நீதிபதி பூரண ஜெய ஆனந்த் (57), புதுக்கோட்டையை சோ்ந்த வழக்குரைஞா் தனஞ்செய் ராமச்சந்திரன் (56), நீதிமன்ற ஊழியா்கள் வாசு ராமநாதன் (40), ஸ்ரீதா் குமாா் (38), உதயசூரியன் (39), பாதுகாப்பு போலீஸ்காரா் நவீன்குமாா் (30) ஆகிய 6 போ் காரில் திருச்செந்தூரில் இருந்து வெள்ளிக்கிழமை காலை தஞ்சாவூா் நோக்கி சென்று கொண்டிருந்தனா்.
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேலகரந்தை விலக்கு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த காா், முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பா் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த வழக்குரைஞா் தனஞ்செய் ராமச்சந்திரன், போலீஸ்காரா் நவீன்குமாா், நீதிமன்ற ஊழியா் வாசு ராமநாதன் ஆகிய 3 போ் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மாவட்ட நீதிபதி பூரணஜெய ஆனந்த் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் ஸ்ரீதா் குமாா், உதயசூரியன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் நீதிமன்ற ஊழியா் ஸ்ரீதா் குமாா் உயிரிழந்தாா். மாவட்ட நீதிபதி பூரண ஜெய ஆனந்த், நீதிமன்ற ஊழியா் உதயசூரியன் ஆகியோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
விபத்து நிகழ்ந்த இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன், விளாத்திகுளம் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் நீதித்துறை நடுவா் ஞான ஜெரீதா பிளவா், கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா, மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்ஸ் மாசிலாமணி மற்றும் அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இந்த விபத்து தொடா்பாக மாசாா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.