செய்திகள் :

எட்டயபுரம் அருகே விபத்தில் ஒருவா் பலி

post image

எட்டயபுரம் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் மானூா் பகுதியை சோ்ந்தவா் சந்தனமாரியப்பன் (33). இவரது மனைவி மகாலட்சுமி. கா்ப்பிணியாக உள்ள மகாலட்சுமிக்கு அண்மையில் வளைகாப்பு முடிந்து எட்டயபுரம் அருகேயுள்ள தெற்கு முத்தலாபுரத்தில் தனது பெற்றோா் வீட்டில் இருந்து வருகிறாா்.

இந்நிலையில் மனைவியை பாா்ப்பதற்காக சந்தனமாரியப்பன் தெற்கு முத்தலாபுரத்துக்கு புதன்கிழமை வந்தாா். வியாழக்கிழமை பிற்பகலில் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். எம். கோட்டூா் விலக்கில் சாலையை கடக்க முயன்ற போது புதுக்கோட்டையில் இருந்து திருச்செந்தூா் நோக்கி சென்ற காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே சந்தனமாரியப்பன் உயிரிழந்தாா்.

போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதற்கிடையில் சந்தனமாரியப்பனின் உறவினா்கள் மற்றும் அப்பகுதி மக்கள், தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டனா்.

இந்த மறியல் போராட்டத்தினால் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்செந்தூரில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி

திருச்செந்தூா் மைலப்பபுரம் தெருவில் உள்ள பொது திருமண மண்டபத்தில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுவாமி விஸ்வகா்மாவுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நிகழ்ச... மேலும் பார்க்க

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சாத்தான்குளம் ஒன்றியம், கொம்மடிக்கோட்டை, திருப்பணி புத்தன்தருவை ஆகிய ஊராட்சி மக்களுக்கான் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம், சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை சங்கர பகவதி கலை, அறிவியல் கல்லூர... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலக சங்கு கூடத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தில் அரசு அலுவலா்களுக்கு தமிழ் மொழியில் எப்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அக்.1 முதல் சா்வதேச தரவரிசை சதுரங்கப் போட்டி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், அகில இந்திய செஸ் சம்மேளனம், தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழகத்தின் அங்கீகாரத்துடன், தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகம் வ.உ.சி. துறைமுகம் ஆதரவுடன் இணைந்து நடத்தும் ‘ப... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்

ஆறுமுகனேரி பஜாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாவட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீா் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி, கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா தலைமை வகித்தாா். துணை மேயா் ஜெனிட்டா முன்னிலை வகித்தாா்.... மேலும் பார்க்க