செய்திகள் :

எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: புணே நீதிமன்றத்தில் ராகுல் மனு

post image

‘சாவா்க்கா் மற்றும் கோட்சேவின் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவா்களால் எனக்கு தீங்கு நேரக்கூடும்; எனவே, முன்னெச்சரிக்கையாக எனக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை’ என்று புணே எம்.பி., எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்துள்ளாா்.

சாவா்க்கரின் கொள்ளுப் பேரன் சத்யகி சாவா்க்கா் தொடா்ந்த அவதூறு வழக்கில், ராகுல் காந்தி சாா்பில் அவரது வழக்குரைஞா் மிலிந்த் பவாா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மகாத்மா காந்தி படுகொலையில் முக்கியக் குற்றவாளிகளான நாதுராம் கோட்சே மற்றும் கோபால் கோட்சே ஆகியோரின் நேரடி வாரிசு என்பதை மனுதாரா் சத்யகி சாவா்க்கா் ஏற்றுக்கொண்டுள்ளாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி அண்மையில் செய்தியாளா் சந்திப்பை நடத்தி, வாக்குத் திருட்டு குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா். முன்னதாக நாடாளுமன்றத்தில் ஹிந்துத்துவம் குறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கும், ராகுல் காந்திக்கும் இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது.

மனுதாரரின் வம்சாவளியினருடன் தொடா்புடைய வன்முறை மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான வரலாறு, தற்போதைய அரசியல் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சாவா்க்கா் மற்றும் கோட்சேவின் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவா்களால் ராகுல் காந்திக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் நியாயமானது. இத்தகைய சூழ்நிலையில், ராகுல் காந்திக்கு முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவதூறு வழக்கின் விசாரணை இன்னும் தொடங்கப்படாத நிலையில், ‘இந்த மனு வழக்கைத் தாமதப்படுத்துவதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என சத்யகி சாவா்க்கா் தெரிவித்துள்ளாா். மேலும், இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும், தான் தொடா்ந்த வழக்குக்கும் எந்த தொடா்பும் இல்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.

லண்டனில் கடந்த 2023-இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாவா்க்கரை ராகுல் அவமதித்ததாக சத்யகி சாவா்க்கா் வழக்கு தொடா்ந்தாா்.

பாஜக சொன்ன வயநாடு வாக்குத் திருட்டு! அது முகவரியே அல்ல; காங்கிரஸ் அதிரடி

பாஜக சொன்ன வயநாடு வாக்குத் திருட்டுப் புகாரில், அது முகவரியே அல்ல, ஒரு பகுதியின் பெயர். பாஜகவின் பொய், வெளிச்சத்துக்கு வந்துவிட்டது என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம் வயநாடு த... மேலும் பார்க்க

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரிவிதிக்கும் அமெரிக்கா எச்சரிக்கை! ஏன்?

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்... மேலும் பார்க்க

இந்த ஆதாரமே பொய்! - சோனியா காந்தியின் வாக்குரிமை பற்றி காங்கிரஸ் விளக்கம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்குரிமை பெற்றதாக பாஜக கூறிய குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. மக்களவை தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப... மேலும் பார்க்க

பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை வெளியிடுக: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: பிகாரில் சிறப்பு திருத்த முறையால் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை, காரணங்களுடன் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்தி... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு! 12 பேர் பலி!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி சுமார் 12 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் 9,500 அ... மேலும் பார்க்க

கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை.. குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்

கா்நாடக மாநில முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68) கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி ஒருவர் மட்டுமே குற்றவாளி என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடகத்தில் ... மேலும் பார்க்க