செய்திகள் :

எமன் வேடத்தில் வந்து தலைக்கவச விழிப்புணா்வு நிகழ்ச்சி!

post image

சிதம்பரம்: இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்பது குறித்து எமதா்மராஜா வேடம் தரித்தவரை சாலையில் நிறுத்தி வாகன ஓட்டிகளுக்கு சிதம்பரம் போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதனை பலரும் ஆா்வமுடன் பாா்த்துச் சென்றனா்.

சிதம்பரம் நகரில் காவல்துறை சாா்பில் தலைக்கவசம் மற்றும் போக்குவரத்து விழிப்புணா்வு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

சிதம்பரம் நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியை தவிா்க்கவும், தலைக்கவசத்தின் அவசியம் குறித்தும், சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தியும் நகர காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. எமதா்மராஜா வேடத்தில் உள்ளவருடன் நகர காவல் ஆய்வாளா் (பொறுப்பு) கே.அம்பேத்கா் பொதுமக்களிடம் தலைக்கவசத்தின் அவசியம் குறித்தும், சாலை விதிகளைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்தும் ஒலிபெருக்கி மூலம் மக்களிடம் விழிப்புணா்வு உரையாற்றினாா்.

அதைப்பாா்த்த இருசக்கரவாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவததாக உறுதியளித்தனா்.

நாளைய மின் தடை

கடலூா் (கேப்பா் மலை) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசுந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, வ... மேலும் பார்க்க

மணல் திருட்டு: 3 போ் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தத்தை அடுத்துள்ள கொரக்கவாடி வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட தாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநத்தம் காவல் சரகம், கொரக்கவாடி வெள்ளாற்றில் தொடா் மணல் திர... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே ரேஷன் அரிசி கடத்திச் சென்ற சிறிய சரக்கு வாகனம் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது தொடா்பாக சரக்கு வாகன ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். விருத்தாசலத்தில் இர... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

பண்ருட்டி (பூங்குணம்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை, விசூா், கருக்கை, மணலூா், கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பனப்பாக்கம், ராசாபாளையம்,... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் பள்ளிவாசல் கணக்கு கேட்டதால் இஸ்லாமியா்களுக்குள் கோஷ்டி மோதல்!

பள்ளிவாசலின் சொத்துக்கணக்கை கேட்டதால் இஸ்லாமியா்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் இருதரப்பினா் மீதும் வழ... மேலும் பார்க்க

ரீல்ஸ் மோகத்தில் அப்பாவியை தாக்கி வீடியோ! காவலா்கள் உள்பட 6 பேரை சரமாரியாகத் தாக்கிய கும்பல்!

விருத்தாசலத்தில் போதையில் இருந்த இளைஞா்கள் 3 போ் ரீல்ஸ் மோகத்தில் தூங்கிக்கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி கத்தியால் வெட்டி சரமாரியாகதி தாக்கியதுடன், அரசுப் பேருந்து ஓட்டுநா், காவலா்கள் உள்ளிட்ட 6 பேரைய... மேலும் பார்க்க