செய்திகள் :

எலான் மஸ்க்குடன் பெங்களூரு தொழில்முனைவோர் எடுத்த செல்ஃபி... இவ்வளவு கவனம் பெறுவது ஏன் தெரியுமா?

post image

பெங்களூருவைச் சேர்ந்த தொழில்முனைவோர் தீபக் கணகராஜு, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் உடன் செல்ஃபி எடுத்ததாக ஒரு புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டார். முதலில் இது ஒரு சாதாரண சந்திப்பின் புகைப்படம் போல் தோன்றினாலும், அவரது பதிவு நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ளது.

போலி செய்திகள் எவ்வளவு எளிதில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை அந்த பதிவு தெளிவுபடுத்தியது. தீபக் அந்த போஸ்ட்டின் கேப்ஷனில் “எலான் மஸ்க் உடன் ஒரு சாதாரண சந்திப்பு.” என்று பதிவிட்டிருக்கிறார்.

ஏஐயின் உண்மையான ஆபத்து, ரோபோக்களால் மனிதர்களின் வேலைகள் பறிபோவது மட்டுமல்ல, போலி செய்திகள் எவ்வளவு எளிதாகப் பரவுகிறது என்பதை சார்ந்தும் தான் இருக்கிறது.

AI

ஏன் இந்த பதிவு கவனத்தை ஈர்த்தது?

இந்த சந்திப்பு உண்மையில் நடக்கவில்லை, புகைப்படம் முழுவதும் AI-ஆல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெங்களூருவில் இருந்து ஒருவர் எலான் மஸ்குடன் புகைப்படம் எடுத்துள்ளார் என்பதே மக்களிடம் கவனம் பெற்றது, அதன் உண்மைதன்மையை பலரும் அறியவில்லை.

போலி அனுபவங்களை உருவாக்கும் AI

AI-ஆல் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் பிரபலமான நபர்களின் புகைப்படங்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. முற்றிலும் கற்பனையான இடங்கள் மற்றும் நிகழ்வுகளை உண்மையானவை போல் காட்சியளிக்கச் செய்கிறது. இதனால் மக்கள் இல்லாத இடங்களையோ நிகழ்வுகளையோ நம்பி பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த ஜூலை மாதம், மலேசியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், சமூக வலைதளத்தில் ஒரு அழகிய கேபிள் கார் பயணத்தின் வீடியோவைப் பார்த்து, கோலாலம்பூரிலிருந்து பேராக் வரை 370 கி.மீ. பயணம் செய்தனர். ஆனால் அவர்கள் அந்த இடத்திற்கு சென்றபோது அந்த இடம் உண்மையில் இல்லை என்பதைக் கண்டறிந்தனர். அவர்கள் பார்த்து வியந்த வீடியோ AI-ஆல் உருவாக்கப்பட்டது. இப்படி பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு நமக்கு பல வசதிகளை வழங்கினாலும், போலி செய்திகளை எளிதில் உருவாக்கி பரப்புவதற்கு அதிக வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

`அனுமதியின்றி என்னைத் தொட்டார்' - நடிகை அஞ்சலி ராகவ்; மன்னிப்பு கேட்ட போஜ்புரி நடிகர்

போஜ்புரி படங்களில் நடித்து வருபவர் நடிகர் பவன் சிங். இவரும் அஞ்சலி ராகவ்வும் நடித்த பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் பவன் சிங் தனது அனுமதி இல... மேலும் பார்க்க

90-களின் நாஸ்டால்ஜியாவை ஞாபகப்படுத்த பேட்டரி சுவையில் சிப்ஸ் அறிமுகம் - எப்படி இருக்கும்?

வித்தியாசமான உணவு அனுபவங்களைத் தேடும் உணவு ஆர்வலர்களுக்காகவே ரிவைண்ட் (Rewind) என்ற பிராண்ட், 9-வோல்ட் பேட்டரி சுவையில் சிப்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிப்ஸ் பேட்டரியை நாக்கால் தொடும்போது ஏற்படும... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீர்: பாக் தீவிரவாதிகள் 100 தடவைக்கும் மேல் ஊடுருவ உதவிய `GPS' தீவிரவாதி சுட்டுக் கொலை

தீவிரவாதிகள் ஊடுருவல் ஜம்மு காஷ்மீரில் கடும் குளிர்காலத்தைத் தவிர்த்து, மற்ற காலங்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இந்திய எல்லைக்குட்பட்ட காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் தொடர்ந்து ஊடுருவ முய... மேலும் பார்க்க

காதலியை கைவிட்ட காதலன்; தற்கொலையை தடுத்து நிறுத்தியவரை மணந்த பெண் - டெஸ்ட் வைக்கும் தந்தை!

காதல் கோட்டை படத்தில் நடிகை தேவயானி தனது காதலனை தேடி வீட்டை விட்டு புறப்பட்டது போன்று நிஜத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ஸ்ரத்தா திவாரி என்ற இளம்பெண் சர்தக் எ... மேலும் பார்க்க

UP: "மனைவியின் தங்கையைத் திருமணம் செய்து வைங்க" - மின்கோபுரத்தில் ஏறிய நபர்; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசத்தில் ராஜ் சக்சேனா என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு பெண்ணை முதலில் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், திருமணமாகி ஒரு வருடத்தில் அவரது மனைவி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டதாகக் கூறப்படுகி... மேலும் பார்க்க

சீனா: "மன அழுத்தைப் போக்கவே இதைச் செய்தேன்" - பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து ரத்தத்தைத் திருடிய நபர்

சீனாவைச் சேர்ந்த லி என்பவர் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, ரத்தம் எடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி... மேலும் பார்க்க