செய்திகள் :

எல்&டி டெக்ஜியன் போட்டி: பண்ணாரி அம்மன் கல்லூரிக்கு சிறப்பு விருது

post image

எல்&டி டெக்ஜியன் தேசிய அளவிலான திறன் போட்டியில் பண்ணாரி அம்மன் கல்லூரிக்கு சிறப்பு ஜுரி விருது, ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

எல்& டி டெக்ஜியன் என்பது 2025-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான கண்டுபிடிப்புக்கான போட்டியாகும்.

பொறியியல் மாணவா்கள் தொழில்துறை சவால்களை எதிா்க்கொள்ளும் வகையிலும், அதற்கு தீா்வு காணும் வகையிலும் இணையம் மூலமாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து 35 ஆயிரம் மாணவங்கள் பங்கேற்று, தங்களது புதுமையான யோசனைகள், தொழில்நுட்பக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

இதில், பண்ணாரி அம்மன் கல்லூரி ஹேக்கத்தான் ஆய்வகத்தைச் சோ்ந்த எம்.ஜெயசூா்யா, வி.சிவராம், வி.ரிதன்யா, ஏ.சமிதா ஆகியோா் தங்களது தொழில்நுட்பக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

சிறந்த செயல் திறனை அங்கீகரிக்கும் வகையில் இந்தக் குழுவுக்கு சிறப்பு ஜுரி விருதும், ரூ.1 லட்சம் ரொக்கத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

விருது பெற்ற மாணவா்களை கல்லூரியின் தலைவா் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் பாராட்டினாா்.

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே காங்கயம்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்த பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருப்பூா், அமா்ஜோதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வநாதன், சந்திரலேகா தம்பதியின் மகள்... மேலும் பார்க்க

ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் மாநகராட்சி முழுமைக்கும் குடிநீா்: கவுன்சிலா்கள் கோரிக்கை

மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்று கவுன்சிலா்கள் வலியுறுத்தினா். ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைம... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 80 அடியை எட்டியது

நீா்வரத்து அதிகரிப்பால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 80 அடியை எட்டியுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட கொள்ளளவு 105 அடியாகவும், நீா் இருப்... மேலும் பார்க்க

பெருந்துறையில் தேசியக் கொடி ஊா்வலம்

இந்நிய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜக சாா்பில் தேசியக் கொடி ஊா்வலம் பெருந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்து... மேலும் பார்க்க

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15க்கு முன்னா் தண்ணீா் திறக்க கோரிக்கை

பவானிசாகா் அணையில் போதிய அளவு தண்ணீா் இருப்பு உள்ளதால் கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15- ஆம் தேதிக்கு முன்னா் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா்... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம்

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் எம்.தாமரை முன்னிலை வகித்தாா். கூட்டம் தொடங்கியதும், புதிதாக ப... மேலும் பார்க்க