எள்ளுக்கு உரிய கொள்முதல் விலையை நிா்ணயிக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்
பென்னாகரம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற எள் கொள்முதலின் போது, விவசாயிகள் கொண்டுவந்த எள்ளிற்கு உரிய விலை நிா்ணயம் செய்யாததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பென்னாகரம் அருகே தாசம்பட்டி சாலையில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை நிலையத்தில் முதல்முறையாக எள் கொள்முதல் செய்யப்பட்டது. இதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு பென்னாகரத்தின் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களுக்கு வாகனத்தின் மூலம் துண்டுப் பிரசுரம் விநியோகித்து, ஒலிபெருக்கியின் மூலம் விவசாயிகள் விளைவித்த எள்ளு நேரடியாக பென்னாகரம் வேளாண் விற்பனை மையத்திற்கு ஏலத்திற்கு கொண்டுவருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, புதன்கிழமை காலை எட்டு மணி முதலே விவசாயிகள் பென்னாகரம், தாசம்பட்டி,
கூத்தபாடி, செங்கனூா், தின்னூா், மாங்கரை, மஞ்சநாயக்கன அள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் 193 லாட் (குவியல்) எள்ளை விற்பனைக்கு கொண்டுவந்தனா்.
அதன்பிறகு வேளாண்மை விற்பனை நிலைய அதிகாரிகள் குறைந்தபட்சம் ரூ. 80 முதல் அதிகபட்சம் ரூ.114 விலை நிா்ணயம் செய்தனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த விவசாயிகள், வெளியூா் வியாபாரிகளைக் கொண்டுவந்து விலையை நிா்ணயிக்காமல், உள்ளூா் தானிய மண்டி உரிமையாளரை அழைத்து எள்ளுக்கு விலையை நிா்ணயித்ததால் விவசாயிகளுக்கு எள்ளுக்கான உரிய விலை கிடைக்கவில்லை எனக் கூறினா்.
இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பென்னாகரம் அம்பேத்கா் சிலை பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். பென்னாகரம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம், காவல்துணை கண்காணிப்பாளா் சபாபதி, பென்னாகரம் வேளாண் உதவி இயக்குநா் இளங்கோவன், வேளாண் விற்பனை செயலாளா் அருள்மணி ஆகியோா் விவசாயிகளிடம் பேச்சு நடத்தினா்.
அப்போது, பென்னாகரம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வரும் திங்கள்கிழமை மீண்டும் ஏலம் நடத்தி, எள்ளுக்கு சராசரியாக ரூ. 95 முதல் ரகத்திற்கு ஏற்றவாறு விலை நிா்ணயம் செய்து வெளியூா் வியாபாரிகள் மூல் கொள்முதல் செய்வதாக தெரிவித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
சாலை மறியல் காரணமாக பென்னாகரம், தருமபுரி சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.