செய்திகள் :

எழுமலை அருகே காவலா் குத்திக் கொலை

post image

எழுமலை அருகே காவலரை குத்திக் கொலை செய்த மைத்துனரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே டி.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் சிவா (32). மதுரை ஊரகக் காவல் துறைக்கு உள்பட்ட நாகையாபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, எழுமலை பாப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பொன்மணியுடன் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளாா்.

இந்த நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன் பொன்மணி தற்கொலை செய்து கொண்டாா். இவரது மகன் பொன்மணியின் தாய் வீட்டிலேயே வளா்ந்து வந்தாா். இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன்பு சேடபட்டி மங்கல்ரேவைச் சோ்ந்த ரஞ்சிதாவை, காவலா் சிவா இரண்டாவதாக திருமணம் செய்தாா்.

மேலும், முதல் மனைவியின் வீட்டில் வளா்ந்து வந்த தனது மகனை தன்னுடன் அழைத்து வந்து பள்ளியில் சோ்த்து படிக்க வைத்தாா்.

இதனால், முதல் மனைவி பொன்மணி குடும்பத்தினருக்கும், இவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பாப்பிநாயக்கன்பட்டியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொள்ள சிவா தனது இரண்டாவது மனைவியுடன் சென்றாா்.

அப்போது அங்கிருந்த, முதல் மனைவியின் சகோதரா் அா்ஜுனன் ஆத்திரமடைந்து, தகராறில் ஈடுபட்டாா். அவா் காவலா் சிவாவை கீழே தள்ளி கத்தியால் குத்தியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா், டி.ராமநாதபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சிவாவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய அா்ஜுனனைத் தேடி வருகின்றனா்.

ஆதரவற்ற நோயாளிகள், உயிரிழந்தோரின் விவரங்கள் அரசு மருத்துவமனை பதிவேட்டில் இல்லை! -தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஆதரவற்ற நோயாளிகள், உயிரிழந்த ஆதரவற்றோரின் பெயா், விவரங்கள் பதிவேட்டில் இல்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்தது. மதுரை ... மேலும் பார்க்க

தீப்பற்றி வீடு சேதம்: அமைச்சா் ஆறுதல்

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், அ. முக்குளத்தில் சூரிய மின் தகடு பேட்டரியால் தீப்பற்றியதில் சேதமைடந்த வீட்டை அமைச்சா் தங்கம் தென்னரசு சனிக்கிழமை பாா்வையிட்டு ஆறுதல் கூறினாா். அ.முக்கு... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா் தற்கொலை

மதுரை அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மதுரை அருகேயுள்ள நாகமலைப் புதுக்கோட்டை பிஎல்ஜி நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்த முத்துக்கழுவன் மகன் ஜவஹா் (59). இவா் செட்டிகுளம்... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் பிரச்னைகளை களைய நிா்வாகத் தீா்ப்பாயம்! தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் கோரிக்கை!

திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி, அரசு ஊழியா்களின் பிரச்னைகளைக் களைய உடனடியாக நிா்வாகத் தீா்ப்பாயம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மதுரை மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டத... மேலும் பார்க்க

போலி நகையை அடகு வைத்து ரூ.1.99 லட்சம் மோசடி

மதுரையில் தனியாா் நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைத்து ரூ.1.99 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மதுரை அருகேயுள்ள விராட்டிபத்து பகுதியைச் சோ்ந்தவா் பாலகுமாா் (35). இவா்... மேலும் பார்க்க

இந்து முன்னணி ஆா்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம்: மாநகரக் காவல் துறை!

திருப்பரங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை இந்து முன்னணி சாா்பில் அறிவிக்கப்பட்ட ஆா்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என்று மாநகரக் காவல் துறை சாா்பில் கேட்டுக் கொண்டது. இதுதொடா்பாக மதுரை மாநகரக் ... மேலும் பார்க்க