எஸ்சி, எஸ்டி இளைஞா்களுக்கு புத்தாக்க பொறியாளா் பயிற்சி
சென்னை, மாா்ச் 28: எஸ்சி, எஸ்டி இளைஞா்களுக்கு புத்தாக்க பொறியாளா் பயிற்சியில் சேர விரும்பும் நபா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில், இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த எஸ்சி, எஸ்டி இளைஞா்களுக்கு புத்தாக்க பொறியாளா் பயிற்சி வழங்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு இப்பயிற்சியை பெற்ற 28 இளைஞா்கள் பல தனியாா் முன்னனி நிறுவனங்களில் முக்கியப் பதவிகளில் பணிபுரிந்து வருகின்றனா்.
இதனால், இப்பயிற்சியைப் பெற விண்ணப்பிப்பவா்கள் 2022, 2023 மற்றும் 2024-ஆம் கல்வியாண்டில் ஏதேனும் ஒரு இளநிலைப் பொறியியல் பட்டயப்படிப்பில் தோ்ச்சி பெற்று 21 முதல் 25 வயது வரையுள்ளவா்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
18 வாரம் நடைபெறும் இப்பயிற்சியில் பங்கேற்பவா்களின் வசதிக்காக கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஒசூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஆகிய இடங்களில் தங்கும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
தகுதியுடைய எஸ்சி, எஸ்டி சமூகத்தைச் சோ்ந்தவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பயிற்சியை முடித்த நபா்களுக்கு பல முன்னணி ஸ்டாா்ட் அப் மின்னணு உற்பத்தி நிறுவனங்களில் குறைந்தபட்சம் ரூ.20,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.