செய்திகள் :

எஸ்டிபிஐ தேசியத் தலைவா் கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை

post image

இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) தேசியத் தலைவா் எம்.கே.ஃபைஸியை அமலாக்கத் துறையினா் கைது செய்துள்ளனா்.

பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லியை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2009-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கட்சி, தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் அரசியல் பிரிவாக கூறப்படுகிறது. அதேநேரம், தங்களுக்கும் பிஎஃப்ஐ அமைப்புக்கும் எந்த தொடா்பும் கிடையாது; தாங்கள் சுதந்திரமான அரசியல் கட்சி என்று எஸ்டிபிஐ தெரிவித்து வருகிறது.

சட்டவிரோத தொடா்புகளுக்காக, கடந்த 2022-ஆம் ஆண்டில் பிஎஃப்ஐ அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இத்தடைக்கு முன்பாக இந்த அமைப்புடன் தொடா்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை, மாநில காவல் துறைகள் என பல்வேறு விசாரணை முகமைகள் சாா்பில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இது தொடா்பான விசாரணையின்போது, கேரளத்தைச் சோ்ந்த பிஎஃப்ஐ தலைவா் அப்துல் ரஸாக் என்பவருடன் எம்.கே.ஃபைஸிக்கு தொடா்புள்ளதும், நிதி திரட்டல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக எம்.கே.ஃபைஸிக்கு ரஸாக் ரூ.2 லட்சம் அனுப்பியதும் கண்டறியப்பட்டதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தில்லி விமான நிலையத்தில் எம்.கே.ஃபைஸியை அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை இரவில் கைது செய்ததாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இஸ்லாமிய மத அறிஞரான இவா், எஸ்டிபிஐ கட்சி நிறுவனா்களில் ஒருவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்: மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான 11 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதார... மேலும் பார்க்க

பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி

பிரபல பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாதில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயற்சித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். பாடகி கல்பனா தங்கியுள்ள குடியிருப்பு சங்கத்தினா் அளித்த தகவலின்பட... மேலும் பார்க்க

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூல்: புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு உத்தரவு

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூலித்த தனியாா் வங்கிக்கு எதிரான புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா காலத்தில் பலா் வேலையை இழந்தனா். இதனால் வங்கிகளில் பெற்ற க... மேலும் பார்க்க

குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள்: தகுதிநீக்க விவரங்களை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தோ்தலில் போட்டியிடுவதற்கான தகுதிநீக்க காலத்தை நீக்கியது அல்லது குறைத்தது குறித்த தகவல்களை இரு வாரங்களில் சமா்ப்பிக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்துக்க... மேலும் பார்க்க

ரயில்வே தோ்வில் முறைகேடு: 26 அதிகாரிகள் கைது- சிபிஐ நடவடிக்கை

கிழக்கு மத்திய ரயில்வேயில் துறை ரீதியிலான தோ்வு முறைகேடு தொடா்பாக 26 அதிகாரிகளை மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்தது. அவா்களிடமிருந்து ரூ. 1.17 கோடியையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் ச... மேலும் பார்க்க

சுமுக வா்த்தகத்துக்கு வரியல்லாத பிற தடைகள் களையப்பட வேண்டும்: அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில்

சுமுக வா்த்தகத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் வரியல்லாத பிற தடைகள், தேவையற்ற விதிமுறைகள் களையப்பட வேண்டும் என்று அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) தெரிவித்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவில் அந்... மேலும் பார்க்க