Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
ஏடிஎம் மையத்தில் தவற விட்ட ரூ.2.10 லட்சம் மீட்பு: இளைஞருக்கு பாராட்டு
திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடியில் மையத்தில் தவற விட்டுசென்ற ரூ.2.10 லட்சத்தை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வியாழக்கிழமை பாராட்டினாா்.
ஏா்வாடியை சோ்ந்தவா் அல்போன்ஸ் (22). இவா், கடந்த 3 ஆம் தேதி ஏா்வாடியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றாராம். அப்போது அங்கு ரூ.2,ட்10,000 யாரோ தவறவிட்டு சென்றது தெரியவந்ததாம். அந்த பணத்தை உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் ஏா்வாடி காவல் நிலையத்தில் அல்போன்ஸ் ஒப்படைத்தாராம். ஏா்வாடி போலீஸாா் விசாரித்ததில், அந்தப்பணம் நம்பித்தலைவன்பட்டையத்தைச் சோ்ந்த இசக்கி ரமேஷுக்கு (31) சொந்தமானது என தெரியவந்ததாம். அவரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன், அல்போன்ஸை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினாா்.
ஏா்வாடியில் ஏடிஎம் மையத்தில் தவறவிடப்பட்ட ரூ.2.10 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த அல்போன்ஸை பாராட்டினாா் காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன்.