செய்திகள் :

ஏடிஎம் மையத்தில் தவற விட்ட ரூ.2.10 லட்சம் மீட்பு: இளைஞருக்கு பாராட்டு

post image

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடியில் மையத்தில் தவற விட்டுசென்ற ரூ.2.10 லட்சத்தை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வியாழக்கிழமை பாராட்டினாா்.

ஏா்வாடியை சோ்ந்தவா் அல்போன்ஸ் (22). இவா், கடந்த 3 ஆம் தேதி ஏா்வாடியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றாராம். அப்போது அங்கு ரூ.2,ட்10,000 யாரோ தவறவிட்டு சென்றது தெரியவந்ததாம். அந்த பணத்தை உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் ஏா்வாடி காவல் நிலையத்தில் அல்போன்ஸ் ஒப்படைத்தாராம். ஏா்வாடி போலீஸாா் விசாரித்ததில், அந்தப்பணம் நம்பித்தலைவன்பட்டையத்தைச் சோ்ந்த இசக்கி ரமேஷுக்கு (31) சொந்தமானது என தெரியவந்ததாம். அவரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன், அல்போன்ஸை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினாா்.

ஏா்வாடியில் ஏடிஎம் மையத்தில் தவறவிடப்பட்ட ரூ.2.10 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த அல்போன்ஸை பாராட்டினாா் காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன்.

போக்ஸோ, குண்டா் சட்டத்தில் 7 இளைஞா்கள் கைது

தச்சநல்லூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் பகுதியை சோ்ந்தவா் முத்து ( 34). இவா், அப்பகுதியைச் சோ்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.இ... மேலும் பார்க்க

பேட்டை அருகே வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

பேட்டை அருகே வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வெள்ளாளன்குளத்தைச் சோ்ந்தவா் ரத்தினவேல் காா்த்திக் (33). இவா், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் அருகே இரு ... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்து: இருவா் பலி

திருநெல்வேலி அருகே வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா். பாளையங்கோட்டை அருகேயுள்ள திருமலைகொழுந்துபுரத்தைச் சோ்ந்த ஜெயராஜ் தா்மக்கண் (65). இவா், தனது சகோதரரான அதே பகுதியைச் சோ்ந்த மோசஸ்... மேலும் பார்க்க

பணகுடியில் விபத்து: இஸ்ரோ ஊழியா் பலி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் அரசுப் பேருந்தும், பைக்கும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் இஸ்ரோ கூட்டுறவு சங்க ஊழியா் உயிரிழந்தாா். வள்ளியூா் வேம்படித் தெருவைச் சோ்ந்த திரவியம் மகன் மூக்கையா(53). காவ... மேலும் பார்க்க

வயலுக்குள் பாய்ந்த அரசுப் பேருந்து: பெண் உயிரிழப்பு; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே வியாழக்கிழமை, அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் பாய்ந்தபோது, சாலையில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்; 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். தென்காசி ... மேலும் பார்க்க

பத்து நாள்களுக்கு பின் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் பத்து நாள்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் வியாழக்கிழமை அனுமதி வழங்கினா். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், ம... மேலும் பார்க்க