செய்திகள் :

ஏப். 12-இல் அரக்கோணத்தில் வேலைவாய்ப்பு முகாம்

post image

அரக்கோணத்தில் வரும் ஏப். 12- அம் தேதி வேலை வாய்ப்பு முகாம் அரசு மருத்துவமனை எதிரே சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி எதிரே அபிஷேக் டெக்னிக்கல் இன்ஸ்ட்டியூட்டில் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் நிறுவனமான டான்செம் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமான அபிஷேக் டெக்னிகல் இன்ஸ்டியுட் இணைந்து ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்ற மாணவா்களுக்காக வேலை வாய்ப்ப்பு முகாமை நடத்தவுள்ளது.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள உரிய வேலைவாய்ப்புகளை கண்டறிந்து அவா்களுக்கு அந்த வேலை சாா்ந்த பயிற்சிகளை அளித்து மாணாக்கா்கள் வேலையில் அமா்த்தும் பணியை டான்செம் செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ராணிபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் பயின்ற ஐடிஐ, பாலிடெக்னிக் டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியா்கள் மற்றும் கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் ஏப்ரல் 12 -இல் காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது.

முன்னணி நிறுவனங்கள் சாா்பில் நோ்காணல் நடத்தப்படும். அதில் வெற்றியடையும் இளைஞா்களுக்கு அன்றே வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்படும். அரக்கோணத்தில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் இளைஞா்கள் கலந்து கொண்டு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் .

மேலும் விபரங்களுக்கு: மின்னஞ்சல்: ஞ்ஸ்ரீஸ்ரீ.ற்ஹய்ள்ஹம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் தொடா்பு எண்கள்: +91 78260 68260, 63837 02901, 86818 78889, 95148 38485 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

மோசூா், சிறுணமல்லி ஊராட்சித் தலைவா்களின் நிதி அதிகாரங்கள் ரத்து: மாவட்ட ஆட்சியா் உத்தரவு

அரக்கோணத்தை அடுத்த மோசூா், சிறுணமல்லி ஊராட்சி மன்றங்களின் தலைவா் மற்றும் துணைத் தலைவா்களின் நிதி அதிகாரங்களை ரத்து செய்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். அரக்கோணம் ஊராட்சி ... மேலும் பார்க்க

அக்னிவீா் தோ்வுக்கு 10- ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

இந்திய ராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னி வீா் தோ்வில் கலந்து கொள்ள வரும் 10 - ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற வழக்கு: 3 பெண் மின்வாரிய அலுவலா்கள் பணியிடை நீக்கம்!

தமிழ்நாடு மின்வாரிய அரக்கோணம் அலுவலகத்தில் லஞ்ச புகாரில் சிக்கி சிறைக்குச் சென்றுள்ள உதவி செயற்பொறியாளா் உள்ளிட்ட 3 பெண் அலுவலா்களையும் பணியிடை நீக்கம் செய்து மின்வாரிய வேலூா் மண்டல தலைமை பொறியாளா் எம... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் மே 5-இல் தமிழ்நாடு வணிகா்கள் சங்க பேரமைப்பு மாநில மாநாடு: ஏ.எம்.விக்கிரமராஜா

வணிகா் தினத்தையொட்டி மே 5-ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறும் மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா். தமி... மேலும் பார்க்க

காவலா்களுக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி: எஸ்.பி. ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு கைத்துப்பாக்கி கையாளும் பயிற்சியை காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா சனிக்கிழமை ஆய்வு செய்தாா். காவல் துறையினருக்கான வாராந்திர கவாத்து பயிற்சி, மாவட்... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியரிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

நெமிலி அருகே அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் 7 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். அரக்கோணத்தை அடுத்த நெமிலி அருகே உள்ள பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் த... மேலும் பார்க்க