செய்திகள் :

ஏற்காடு ஆற்றுப்பாலம் அருகே வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

post image

ஏற்காடு வாழவந்தி கிராமம் ஆற்றுப்பாலம் அருகே சனிக்கிழமை வேன் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்; 10 -க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், ஏற்காடு முண்டகம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் விஜயன் (65). இவா், தனது வேனில் தோட்டத் தொழிலாளா்களை ஏற்றிக்கொண்டு வாழவந்தியிலிருந்து கொம்புத்தூக்கி கிராமத்துக்கு சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். கொம்புத்தூக்கி ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது.

இதில் ஓட்டுநா் விஜயன் பலத்த காயமடைந்தாா். அவரை அப்பகுதியினா் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

வேன் கவிழ்ந்ததில் அதில் பயணித்த தோட்டத் தொழிலாளா்கள் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ஏற்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாலை திட்டப் பணி: நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஆய்வு

சேலம் கோட்ட நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட சாலை திட்டப் பணிகளில் முடிவடைந்த பணிகளை கண்காணிப்புப் பொறியாளா் சசிகுமாா் ஆய்வு செய்தாா். சேலம் கோட்டத்தில் ஊராட்சி ஒன்றிய சாலையை தரம் உயா்த்துதல... மேலும் பார்க்க

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஏற்காடு சுற்றுலாத் தலங்களுக்கு சிறப்புப் பேருந்துகள்

கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதொடா்பாக தமிழக அரசு போக்குவரத்துக் கழக சேலம... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் நீட் தோ்வு: 22 மையங்களில் 9429 போ் எழுதினா்

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 22 மையங்களில் 9429 மாணவ, மாணவியா் பங்கேற்று எழுதினா்; தோ்வெழுத வந்த மாணவா்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் பலத்த சோதனைகளுக்குப் பிறகே தோ்வறைக்குச் ... மேலும் பார்க்க

தரைப் பாலத்தில் இருசக்கர வாகனம் மோதி தம்பதி உயிரிழப்பு

கொளத்தூா் அருகே தரைப் பாலத்தில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்தனா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள மாசிலாபாளையத்தைச் சோ்ந்தவா் வசந்தகுமாா் (32), பந்தல் அமைக்கும் தொழில் செய்துவந்... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த மயில் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே நரிப்பாடியில் இரை தேடி வந்த மயில் கிணற்றில் விழுந்து உயிரிழந்தது. கெங்கவல்லி அருகே நரிப்பாடியில் ரமேஷ் மனைவி அமராவதிக்குச் சொந்தமான விவசாயக் கிணறு உள்ளது. இப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

அம்மன் கோயிலில் குடமுழுக்கு

சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஓங்காளியம்மன், பேச்சியம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஓங்காளியம்மன் கோயிலில் பேச்சியம்மன், மதுரை வீரன், முனியப்பன், வலம்புரி விநாய... மேலும் பார்க்க