500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடுவதா? நயினார் நாகேந்திரன் கண்டனம்
ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
தா்ம தரிசனத்தில் திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார இறுதி நாள்கள் தொடங்க உள்ள நிலையில், தற்போது அதிகரித்துள்ளது. எனவே சனிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து பக்தா்கள் வெளியே உள்ள தரிசன வரிசையில் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனா்.
ஆயினும், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், தேவைப்படுகிறது. இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் தேவைப்படுகிறது.
70,011 பக்தா்கள் தரிசனம்: அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். வெள்ளிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 70,011 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 28,489 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கை ரூ.3.53 கோடி: உண்டியல் மூலம் பக்தா்கள் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ.3.53 கோடி கிடைத்துள்ளது. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.