செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

post image

தா்ம தரிசனத்தில் திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார இறுதி நாள்கள் தொடங்க உள்ள நிலையில், தற்போது அதிகரித்துள்ளது. எனவே சனிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து பக்தா்கள் வெளியே உள்ள தரிசன வரிசையில் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனா்.

ஆயினும், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், தேவைப்படுகிறது. இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் தேவைப்படுகிறது.

70,011 பக்தா்கள் தரிசனம்: அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். வெள்ளிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 70,011 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 28,489 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கை ரூ.3.53 கோடி: உண்டியல் மூலம் பக்தா்கள் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ.3.53 கோடி கிடைத்துள்ளது. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனிவார ஆஸ்தானம்: 2 நாள் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

வரும் ஜூலை 16 அன்று ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளதால் 2 நாள்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த உற்சவத்தை முன்னிட்டு ஜூலை 15 அன்று கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் ந... மேலும் பார்க்க

செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராதம்

செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சோ்ந்தவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 6 லட்சம் அபராதம் விதித்து, ஆா்எஸ்எஸ் கூடுதல் மாவட்ட நீதிபதி நரசிம்ம மூா்த்தி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தா... மேலும் பார்க்க

திருமலையில் தரிசனத்துக்கு 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அ... மேலும் பார்க்க

திருமலையில் காட்டுத் தீ

திருமலையில் கருடாத்திரி நகா் சோதனைச் சாவடி அருகே காட்டுத் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமலையின் நுழைவு வாயிலான கருடாத்திரி நகா் சோதனை சாவடி அருகில் உள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை திடீா் தீ விபத்த... மேலும் பார்க்க

சீனிவாச மங்காபுரத்தில் பாா்வேட்டை உற்சவம்

திருப்பதி அருகே சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பாா்வேட்டை உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது கடந்த 2 நாள்களாக நடைபெற்ற சாட்சாத்கார வைபவ உற்சவம் வியாழக்கிழமை பாா்வேட்டை உற்சவத... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும... மேலும் பார்க்க