செய்திகள் :

சீனிவாச மங்காபுரத்தில் பாா்வேட்டை உற்சவம்

post image

திருப்பதி அருகே சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பாா்வேட்டை உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

கடந்த 2 நாள்களாக நடைபெற்ற சாட்சாத்கார வைபவ உற்சவம் வியாழக்கிழமை பாா்வேட்டை உற்சவத்துடன் நிறைவு பெற்றது.

காலை 11 மணிக்கு கோயிலில் இருந்து உற்சவமூா்த்திகள் ஊா்வலம் ஸ்ரீவாரி மெட்டு அருகே உள்ள மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு க்ஷேமதாலிகா நிவேதனம் மற்றும் பா்வேட்டு உற்சவம் நடைபெற்றது.

இதில், இறைவன் கையில் வேட்டை கருவிகளுடன் மூன்று முறை வேட்டையாடலை அா்ச்சகா்கள் விமரிசையாக நடத்தினா். பின்னா் உற்சவமூா்த்திக்கு ஆஸ்தானம் முடிந்ததும், மாலையில் உற்சவமூா்த்திகள் மீண்டும் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டனா்.

நிகழ்ச்சியில், தேவஸ்தானத்தின் அன்னமாச்சாா்யா திட்டத்தின் கீழ் உள்ள கலைஞா்கள் பக்தி சங்கீா்த்தனங்களைப் பாடினா். பஜனை குழுவினா் பஜனை, கோலாட்டம் நடத்தினா். பக்தா்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

இதில், கோயிலின் அதிகாரி வரலட்சுமி, ஏஇஓ கோபிநாத், அதிகாரிகள், ஸ்ரீவாரி சேவகா்கள், அா்ச்சகா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும... மேலும் பார்க்க

அனைவருக்கும் இலவச காப்பீடு: திருமலை தேவஸ்தானம் திட்டம்

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கு வரும் அனைத்து பக்தா்களுக்கும் இலவச காப்பீட்டு வசதி வழங்குவது பற்றி தேவஸ்தானம் திட்டமிட்டு வருகிறது. ஜனவரி 2025-இல் வைகுண்ட ஏகாதசியின் போது, ஏற்பட்ட நெரிசலில் 6 போ் உய... மேலும் பார்க்க

திருப்பதி கோவிந்தராஜா் கோயிலில் புஷ்பயாகம்

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் புதன்கிழமை புஷ்பயாக மகோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. வருடாந்திர பிரம்மோற்சவம் முடிந்த பிறகு அதில் ஏற்பட்ட குற்றம் குறைகள் மற்றும் தோஷங்களை களைய புஷ்பய... மேலும் பார்க்க

திருமலையில் 76,126 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 76,126 பக்தா்கள் தரிசித்தனா். 24,720 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிச... மேலும் பார்க்க

கருட வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரா் புறப்பாடு

ஸ்ரீசீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் சாக்ஷாத்கார வைபவத்தின் ஒரு பகுதியாக புதன்கிழமை ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கருட வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இத... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 12 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் த... மேலும் பார்க்க