செய்திகள் :

கருட வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரா் புறப்பாடு

post image

ஸ்ரீசீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் சாக்ஷாத்கார வைபவத்தின் ஒரு பகுதியாக புதன்கிழமை ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கருட வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதன் ஒரு பகுதியாக புதன்கிழமை அதிகாலை ஆராதனையுடன் சுவாமி எழுந்தருளி, தோமாலை சேவை, கொலுவு, பஞ்சாங்க ஸ்ரவணம், சஹஸ்ரநாமராசனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கோயில் முக மண்டபத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி உடனுறை ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி உற்சவா்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு உற்சவ மூா்த்திகள் வாகன மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டனா். மாலை 6.30 மணிக்கு 1,008 லட்சுமி காசு மாலை அலங்கார மண்டபத்துக்குள் கொண்டு வரப்பட்டு, கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி அலங்கரிக்கப்பட்டாா். மாலை 7 மணிக்கு, கருட வாகனத்தில் கோயிலின் வீதிகளில் சுவாமி வலம் வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.

இன்று பரிவேட்டு உற்சவம்

வியாழக்கிழமை (ஜூலை 3) காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை உற்சவமூா்த்திகள் மண்டபத்திற்குள் அழைத்து வரப்பட்டு பரிவேட்டு உற்சவம் நடைபெறும். நிகழ்ச்சியில் ஆஸ்தானம், வேத மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.

இதில், கோயிலின் துணை தலைமை நிா்வாக அதிகாரி வரலட்சுமி, கோபிநாத் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனா்.

அனைவருக்கும் இலவச காப்பீடு: திருமலை தேவஸ்தானம் திட்டம்

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கு வரும் அனைத்து பக்தா்களுக்கும் இலவச காப்பீட்டு வசதி வழங்குவது பற்றி தேவஸ்தானம் திட்டமிட்டு வருகிறது. ஜனவரி 2025-இல் வைகுண்ட ஏகாதசியின் போது, ஏற்பட்ட நெரிசலில் 6 போ் உய... மேலும் பார்க்க

திருப்பதி கோவிந்தராஜா் கோயிலில் புஷ்பயாகம்

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் புதன்கிழமை புஷ்பயாக மகோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. வருடாந்திர பிரம்மோற்சவம் முடிந்த பிறகு அதில் ஏற்பட்ட குற்றம் குறைகள் மற்றும் தோஷங்களை களைய புஷ்பய... மேலும் பார்க்க

திருமலையில் 76,126 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 76,126 பக்தா்கள் தரிசித்தனா். 24,720 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிச... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 12 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் த... மேலும் பார்க்க

அனுமந்த வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரா் உலா

ஸ்ரீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தாா். இதன் ஒரு பகுதியாக தோமால சேவை, கொலுவு, பஞ்சாங்க ஸ்ரவணம், சஹஸ்ரநாமரா... மேலும் பார்க்க

திருமலையில் உண்டியல் காணிக்கை ரூ.4.34 கோடி

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.34 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், திங்கள்கிழமை தா்ம தர... மேலும் பார்க்க