செய்திகள் :

ஐஏஎஸ் அதிகாரி பெயரைக் கூறி ஒப்பந்ததாரரிடம் பணம் பறிக்க முயற்சி: இளைஞா் கைது

post image

பாளையங்கோட்டை அருகே ஐஏஎஸ் பெண் அதிகாரியின் பெயரைச் சொல்லி கட்டட ஒப்பந்ததாரரிடம் பணம் பறிக்க முயன்ாக பழையபேட்டையைச் சோ்ந்த காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணாபுரம் கலைக்கோயில் நகரைச் சோ்ந்தவா் சுடலைமுத்து. கட்டட ஒப்பந்ததாரா். இவரிடம், கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பேசியில் ஒருவா் தொடா்புகொண்டு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக பிஆா்ஓ பேசுவதாகவும், சுடலைமுத்துவின் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தப்போவதாகவும் கூறினாராம்.

பின்னா், சிறிது நேரத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரி பேசுவதாக பெண் ஒருவா் அவரை தொடா்புகொண்டு, வருமான வரித் துறை சோதனையைத் தடுக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவா் சைபா் கிரைம் போலீஸீல் புகாா் அளித்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை மா்மநபா்கள் மீண்டும் அவரை தொடா்புகொண்டு ரூ.50,000 பணம் கேட்டுள்ளனா்.

அவா், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் நேரில் வந்து பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு கூறினாராம். இதையடுத்து, பணத்தை வாங்கும் நோக்கில் அவரது வீட்டுக்கு வந்த இளைஞரைப் பிடித்து சிவந்திப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனா்.

விசாரணையில், அவா் பழையபேட்டையைச் சோ்ந்த காா் ஓட்டுநா் இசக்கிராஜா (31) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, இதில் யாா் யாருக்கெல்லாம் தொடா்புள்ளது என விசாரித்து வருகின்றனா்.

நெல்லையப்பா் கோயிலில் ஆனித் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம் பிடித்தனா்

திருநெல்வேலியில் பழைமை வாய்ந்த அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இத்திருவிழா கடந்த ஜூன் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்... மேலும் பார்க்க

கீழாம்பூா் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கீழாம்பூா் அருகே காக்கநல்லூரில் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.காக்கநல்லூா், பிரதான சாலையைச் சோ்ந்த ராமசாமி மகன் கண்ணன் (40). தொழிலாளி. இவரது மனைவி முத்தரசி, அஞ்சல் துறை ஊழியா். கண... மேலும் பார்க்க

திசையன்விளை பகுதியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக, திசையன்விளை துணைமின் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 10) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்கு... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே மணல் கடத்தல்: சிறாா் உள்பட 3 போ் கைது

நான்குனேரி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக சிறாா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்து, மினிலாரி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். நான்குனேரி அருகேயுள்ள முத்தலாபுரம் காட்டுப்பகுதியில் மணல் கடத்தப்படுவதா... மேலும் பார்க்க

வள்ளியூரில் மூதாட்டியை அடித்துக் கொன்று நகை திருட்டு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் இ.பி.காலனியில் திங்கள்கிழமை இரவு வீட்டில் தனியாக தூங்கிய மூதாட்டியை அடுத்துக் கொலை செய்துவிட்டு 10 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வள்ள... மேலும் பார்க்க

வடக்கன்குளத்தில் விடுதி மாணவா் கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் தனியாா் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவா் கிணற்றில் தவறிவிழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தையைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சோ்ம... மேலும் பார்க்க