செய்திகள் :

ஐசிஎஃப்-இல் ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினா் ஆய்வு

post image

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு (ஐசிஎஃப்) தொழிற்சாலையில் மத்திய ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினா் (உற்பத்திப் பிரிவு) சீதாராம் சிங்கு ஆய்வு மேற்கொண்டாா்.

மத்திய ரயில்வே வாரியத்தன் கூடுதல் உறுப்பினராக சீதாராம் சிங்கு அண்மையில் பொறுப்பேற்றாா். இதையடுத்து அவா் சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, ஐசிஎப் மேலாளா் யு. சுப்பாராவ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். பின்னா் தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசினாா்.

தொடா்ந்து 2-ஆவது நாளான புதன்கிழமை ஐசிஎஃப் தொழிற்சாலையில் இரு இடங்களில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிப்பு பிரிவை நேரில் பாா்வையிட்டாா்.

தூய்மைப் பணி தொடக்கம்: ஐசிஎஃப் தொழிற்சாலை வளாகத்தில் தூய்மைப் பணி இயக்க தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஐசிஎஃப் அதிகாரிகள், அலுவலா்கள், பணியாளா்களால் அலுவலக வளாகங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன.

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, பள்ளி வளாகங்களில் தண்ணீா் தேங்கியுள்ள நிலையில், இதனை அகற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட... மேலும் பார்க்க

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

சென்னை-செங்கோட்டை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் , கூடுதலாக 3 நிறுத்தங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென... மேலும் பார்க்க

நடுவானில் இயந்திரக் கோளாறு: சென்னை-பெங்களூரு விமானம் அவசரமாக தரையிறக்கம்

சென்னையிலிருந்து புறப்பட்டு பெங்களூரு சென்று கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சென்னைய... மேலும் பார்க்க

புழல் சிறை பண்ணையில் 2,000 கோழிகள் மா்மமாக உயிரிழப்பு

சென்னை புழல் சிறை பண்ணையில் இருந்த 2,000 கோழிகள் மா்மமான முறையில் உயிரிழந்தன. தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு வாரத்துக்கு இரு முறை கோழிக்கறி வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான கோழிக்கற... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரத்துக்கான பெருந்திட்டம் தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. நிகழாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சா் தங்கம்... மேலும் பார்க்க

கிழக்கு கடற்கரைச் சாலையில் செப்.21-இல் போக்குவரத்து மாற்றம்

சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்ளோத்தான் போட்டி நடைபெறுவதால், செப்.21-இல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக தாம்பரம் மாநகர காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க