Black Magic: 'சூனியம் போன்ற சடங்குக்கு எதிராக சட்டமா?' - கேரள அரசு தாக்கல் செய்த...
ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்: மதுக் கடைகளை மூட இந்து மக்கள் கட்சி கோரிக்கை
திருப்பூா் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 2-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள மதுக் கடைகள், மாமிச கடைகளை மூட வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் ஹரிகரன் மாவட்ட ஆட்சியா் மனீஷுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூா் காலேஜ் சாலை பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஜூலை 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில், திருப்பூா் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்க உள்ளனா்.
எனவே, கோயிலில் இருந்து 300 மீட்டா் தொலைவில் உள்ள அனைத்து மதுக் கடைகள், மாமிச கடைகளையும் ஜூலை 2, 3-ஆம் தேதிகளில் மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.