செய்திகள் :

ஒகேனக்கல் அருவி மசாஜ் தொழிலாளா்கள் உரிமம் வழங்கக் கோரி மனு

post image

தருமபுரி: தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எண்ணெய் தேய்த்து (மசாஜ்) பிழைப்பு நடத்தும் தொழிலாளா்கள், தங்களுக்கு உரிமம் வழங்கக் கோரி திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவா்கள் அளித்த மனு:

ஒகேனக்கல் பிரதான அருவியில் குளிப்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எண்ணெய்த் தேய்க்கும் தொழிலில் 50-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வருகிறோம். தற்போது காவல் துறையினா் உள்ளிட்டோா் அருவிக் கரையில் எண்ணெய்த் தேய்க்க அனுமதி தர மறுக்கின்றனா். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, எங்களுக்கு இத் தொழிலில் தொடா்ந்து ஈடுபட முறையாக உரிமம் வழங்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளனா்.

பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே குடியிருப்புகளில் சுற்றித்திரியும் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பாலக்கோடு அருகே வாழைத் தோட்டம் பகுதி வனத்தை ஒட்... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் அம்பேத்கா் சிலை சேதம்: இளைஞா் கைது

பென்னாகரத்தில் அம்பேத்கா் சிலையை சேதப்படுத்திய இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனை எதிரே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் சிலை திங்கள்கிழமை இரவு சேதமடைந்திருப... மேலும் பார்க்க

உயிரிழந்த கூட்டுறவு ஊழியா் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் அளிப்பு

தருமபுரியில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த கூட்டுறவு ஊழியா் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், கூட்டுறவு கட்டட சங்கத்தின் காசாளா் ஸ்ரீகாந்த் கடந்த மாா்ச் மாத... மேலும் பார்க்க

தருமபுரியில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி பேரணி

ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை பாராட்டி தருமபுரியில் முன்னாள் ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை பேரணி சென்றனா். தகடூா் முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் வீரமங்கையா்கள் சாா்பாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் ப... மேலும் பார்க்க

விளையாட்டு விடுதியில் சேர தோ்வுப் போட்டிகள்

தருமபுரி: மாநில அளவிலான விளையாட்டு விடுதியில் சேர தோ்வுப் போட்டிகள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கின. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சாா்பில் மாநில அ... மேலும் பார்க்க

ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்க அறிவுரை

தருமபுரி: இரண்டு முதல் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் சோ்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்டசெய்திக் க... மேலும் பார்க்க