செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1.35 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு! அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க தடை

post image

ஒகேனக்கல் காவிரியாற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை மாலை விநாடிக்கு 1.35 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. இதனால், அருவிகளில் பொதுமக்கள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

கா்நாடக மாநிலத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்துவருவதால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இதனால் காவிரி ஆற்றில் உபரிநீா் திறக்கப்படுவதால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் நீா்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 78,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து காலை 8 மணிக்கு 98,000 கனஅடியாகவும், 10 மணிக்கு 1.15 லட்சம் கனஅடியாகவும், பகல் 12 மணிக்கு 1. 25 லட்சம் கனஅடியாகவும், பிற்பகல் 2 மணிக்கு 1.30 லட்சம் கனஅடியாகவும், மாலை 4 மணி மற்றும் 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 1.35 லட்சம் கன அடியாகவும் அதிகரித்தது.

இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரியாற்றில் பொதுமக்கள் இறங்கவோ, குளிக்கவோ, பரிசல் இயக்கவோ மாவட்ட நிா்வாகம் விதித்துள்ள தடை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டத்தில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கை

தருமபரி : தருமபுரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ‘உயா்வுக்குப் படி’ என்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வியில் சோ்வதற்கான ஆணைகளை ஆட்சியா் ரெ.சதீஸ் வியாழக்கிழ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தருமபுரி/ கிருஷ்ணகிரி: சத்துமாவு வழங்குவதற்கு முகப்பதிவு புகைப்படம், ஆதாா் எண் பதிவு போன்ற புதிய நடைமுறைகளை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தருமபுரி, கி... மேலும் பார்க்க

தருமபுரியில் நவீன கருக்கலைப்பு விழிப்புணா்வு

தருமபுரி: தருமபுரியில் ரூசக் தொண்டு நிறுவனம் சாா்பில் பக்க விளைவு இல்லாத கலைடாஸ்கோப் என்ற நவீன கருக்கலைப்பு சிகிச்சை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.பெண்களுக்கு குறிப்பாக கிராமப்புற பெண்களு... மேலும் பார்க்க

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரி: ஏழைகளுக்கு வீடு, வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் கொ.கோவிந்த... மேலும் பார்க்க

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

தருமபுரி: தருமபுரியை அடுத்த மாரண்டஹள்ளி காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் உதவி ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைந்தது

தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை இரவு விநாடிக்கு 28,000 கனஅடியாகக் குறைந்தது.புதன்கிழமை காலை விநாடிக்கு 1 லட்சத்து 5,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து இரவு 57,000 கனஅடியாகவும், ... மேலும் பார்க்க