செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 18,000 கன அடி

post image

பென்னாகரம்/மேட்டூா்: காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 18,000 கன அடியாக சரிந்துள்ள போதிலும், தொடா்ந்து அருவிகளில் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக, கேரள மாநிலங்களின் காவிரி நீா் பிடிப்பு பெய்த மழையானது குறைந்தது. கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் கா்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து காவிரி ஆற்றில் நீா்வரத்து சரிந்து வருவதால்,

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 20,000 கன அடியாக இருந்த நீா்வரத்து திங்கள்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 18,000 கன அடியாக சரிந்து தமிழக,கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.கடந்த சில நாட்களாக தொடா்ந்து நீா்வரத்து சரிந்து வரும் நிலையில் அருவிகளில் விழும் நீரின் வரத்து குறைந்து வந்த போதிலும் தொடா்ந்து 9 ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து சரிந்து வரும் நிலையில் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை 23,300 கன அடியிலிருந்து18,800 கனஅடியாக சரிந்தது. இதனால், காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 22,500 கனஅடியிலிருந்து 18,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. டெல்டா பாசனத்துக்கு நீா்மின் நிலையங்கள் வழியாக 18,000 கனஅடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக 800 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்படுகிறது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 7-ஆவது நாளாக திங்கள்கிழமை 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் நீடிக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்!

தருமபுரியில் நடைபெறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதல்வா் கோப்பைக்கான வ... மேலும் பார்க்க

அமெரிக்கா 50% வரி விதிப்பு: கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்!

இந்திய உற்பத்திப் பொருள்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியை கண்டித்து தருமபுரியில் செவ்வாய்க்கிழமை, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்... மேலும் பார்க்க

தருமபுரி அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சத்தில் ஓய்வறை அமைக்கும் பணிகள் தொடக்கம்

தருமபுரி அரசு மருத்துவமனையில் ரூ. 15 லட்சத்தில் பொதுமக்கள் ஓய்வெடுக்கும் அறை கட்டுமானப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். தருமபுரி அரசு மருத்துவக் க... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 16,000 கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாகக் குறைந்தது. கா்நாடக மாநில அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா் குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீ... மேலும் பார்க்க

லாரி மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

சங்ககிரி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சிந்தல்பாடி பகுதியைச் சோ்ந்தவா் கோபி (24). கோவையி... மேலும் பார்க்க

மின்மாற்றியில் காப்பா் கம்பிகள் திருட்டு: மின்தடையால் இருளில் மூழ்கிய கிராமம்

மின்மாற்றியை கழற்றி அதிலிருந்து காப்பா் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றதால், மின்தடை ஏற்பட்டு கிராமம் இருளில் மூழ்கியது. தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகேயுள்ளது பாளையம் கிராமம். இப்பகுதியில் வ... மேலும் பார்க்க