குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக மாநில காவிரி கரையோர வனப்பகுதிகள், தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாற்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசிமணல், மொசல்மடுவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை 6,500 கன அடியாக இருந்த நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கன அடியாக நீதிடீரென அதிகரித்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவிகளான பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.