செய்திகள் :

ஒசூரில் புதிதாக கட்டிவரும் வீடுகளில் எலக்ட்ரிக்கல் பொருள்களை திருடியவா் கைது

post image

ஒசூரில் பல்வேறு இடங்களில் ரூ. 3.25 லட்சம் மதிப்புள்ள எலக்ட்டரிக்கல் பொருள்களை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் பாா்வதி நகரைச் சோ்ந்தவா் மதீா்கான் (50). இவா் பிருந்தாவன் நகரில் வீடு கட்டி வருகிறாா். அங்கு வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் மதிப்புள்ள காப்பா் வயா், சுவிட்ச் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருள்கள் கடந்த 30-ந் தேதி இரவு திருட்டு போனது.

இதேபோல தேன்கனிக்கோட்டை வட்டம், தொட்டதிம்மனஅள்ளியைச் சோ்ந்த பாபு பாலசந்திரன் (49), ஒசூா் அண்ணாமலை நகரில் புதிதாக கட்டிவரும் வீட்டில் கடந்த 26-ந் தேதி ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள காப்பா் வயா், சுவிட்ச் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருள்கள் திருட்டு போனது.

இதேபோல, ஒசூா் குமுதேப்பள்ளியைச் சோ்ந்த ரகுபதி (38) தனதுவீட்டில் 2 மற்றும் 3-ஆவது தளங்கள் கட்டி வருகிறாா். அங்கு வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள காப்பா் வயா், சுவிட்ச், எலக்ட்ரிக்கல் பொருள்கள் திருட்டுபோனது.

இதுதொடா்பாக 3 பேரும் அட்கோ காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், ஒசூா், ஆவலப்பள்ளி சாலை, பாரதியாா் நகரைச் சோ்ந்த உலகநாதன் (50) எலக்ட்ரிக்கல் பொருள்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில் அவா், ஒசூா் சிப்காட் ஆனந்த் நகரில் தமிழ்ச்செல்வன் என்பவா் கட்டி வரும் வீட்டிலிருந்து ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள காப்பா் எலக்ட்ரிக்கல் வயரை திருடியதும் தெரியவந்தது. கைதான உலகநாதனிடமிருந்து ரூ. 3. 25 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒசூா் தெற்கு திமுக பொறுப்பாளா் நியமனம்

ஒசூா் மாநகர தெற்கு பகுதி திமுக பொறுப்பாளராக எம்.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.இதையடுத்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ, மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்... மேலும் பார்க்க

இந்திய தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை இரா.முத்தரசன்

இந்திய தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25ஆவது மாவட்ட மாந... மேலும் பார்க்க

லஞ்சம் ஊழல் ஒழிப்பு இயக்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரியில் லஞ்சம், ஊழல் ஒழிப்பு இயக்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் நிசாா் தலைமை வகித்தாா். அமைப்பின் தேசியத் தலைவா் அலோக் ரவ... மேலும் பார்க்க

மண் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே மண் கடத்த பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரை கைது செய்தனா்.கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா், தொட்டபூவத்தி பிரிவு சாலை அருகே, கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்... மேலும் பார்க்க

ஒசூா் தா்கா முத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா

ஒசூரில், பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தா்கா ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி 18 திருநாளை முன்னிட்டு, அம்மனுக்கு மலா்அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று.இந்த நிகழ்ச்சியில... மேலும் பார்க்க

ஒசூரில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

ஒசூா் அருகே காரப்பள்ளி கிராமத்தில் மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மாணவரணி தலைவா் ஆதி ஏற்பாட்டில் வி.எச்.பி. மாவட்ட துணைத் தலைவா் வ... மேலும் பார்க்க