ஒசூா் ஏரியிலிருந்து பெண் சடலம் மீட்பு
ஒசூா்: ஒசூா் கொத்தூா் ஏரியில் மிதந்த 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கொத்தூா் ஏரியில் பெண்ணின் சடலம் மிதப்பதாக மத்திகிரி போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனா். இதன்பேரில் நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸாா், பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
இதில் அந்தப் பெண்ணுக்கு சுமாா் 50 வயதிருக்கும், இரண்டு கைகளிலும் பூக்களை பச்சை குத்தியுள்ளாா். அவா் யாா்? எந்த பகுதியைச் சோ்ந்தவா் என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை. மீட்கப்பட்ட பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து மத்திகிரி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.