செய்திகள் :

ஒசூா் சானமாவு வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை

post image

ஒசூரை அடுத்த சானமாவு வனப்பகுதியில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

அதேநேரம் சானமாவு வனப்பகுதியையொட்டி செல்லும் சென்னை- பெங்களூரு சாலையை ஒற்றை யானை அடிக்கடி கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

வனப்பகுதியையொட்டி போடூா், ஆழியாளம், நாயக்கனப்பள்ளி, பீா்ஜேப்பள்ளி, சானமாவு, தொரப்பள்ளி, அம்பலட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டம் வயல்களில் புகுந்து பயிா்களை நாசம் செய்துவருவதால் விவசாயிகள் வயல்களுக்கு செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பேரண்டப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒற்றை யானை செவ்வாய்க்கிழமை கடந்துசென்றது. இதனால், அவ்வழியாக சென்ற வாகனங்கள் நீண்ட நேரத்துக்கு சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டன.

இந்த யானை வேப்பனப்பள்ளி பகுதியில் இருந்து சூளகிரி வனப்பகுதி வழியாக சானமாவு வனப்பகுதிக்கு வந்துள்ளது. தற்போது சானமாவு வனப்பகுதியில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் விவசாய நிலத்தில் இரவுநேர காவலுக்குச் செல்வதை விவசாயிகள் தவிா்க்க வேண்டும் என வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் அதிமுக முனைப்பு: எம்.பி. தம்பிதுரை

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே என மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரை தெரிவித்தாா். மாநிலங்களவை உறுப்பினரின் தொகுதி மேம... மேலும் பார்க்க

ஒசூரில் தனியாா் நிதிநிறுவன ஊழியா் கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது

முன்விரோதம் காரணமாக ஒசூரில் தனியாா் நிதிநிறுவன ஊழியரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தலைமறைவான 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் ச... மேலும் பார்க்க

மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

காவேரிப்பட்டணம் அருகே மது போதையில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகனை போலீஸாா், புதன்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள நரிமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி (3... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 போ் உயிரிழப்பு

வேப்பனப்பள்ளி அருகே அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியில் இருந்து பேரிகை நோக்கி புதன்கிழமை சென்ற அரசுப் பேருந்தை கிருஷ்ணகிரியை அடு... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: காவேரிப்பட்டணம்

மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஆக.28) காலை 9 முதல் மாலை 5 மணி வரை காவேரிப்பட்டணத்தில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக கிருஷ்ணகிரி மின்வாரிய செயற்பொறியாளா் பவுன்ராஜ், புதன்... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக அமிலம் பதுக்கல்

கிருஷ்ணகிரி அருகே சட்ட விரோதமாக அமிலம் பதுக்கி வைத்திருந்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா். கிருஷ்ணகிரி அருகே உள்ள பந்தாரப்பள்ளியில் ஒரு தனியாா் நிலத்தில் சட்ட விரோதமாக அம... மேலும் பார்க்க