செய்திகள் :

ஒடிசா: இன்று முதல் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்!

post image

ஒடிசா மாநிலத்தில் அதிகப்படியான வெயில் கொளுத்திவரும் நிலையில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதன்படி ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாள்களாக வெய்யில் அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக 104.5 டிகிரியும், பவுத் மாவட்டத்தில் 104 டிகிரி வெய்யிலும் சுட்டெரித்தது. இந்த நிலையில் வெயில் தாக்கத்திலிருந்து பள்ளி மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில் பள்ளி நேரங்களை மாற்றியமைத்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஒடிசா அமைச்சர் நித்யானந்த கோண்ட் கூறுகையில்,

அதிகப்படியான வெய்யிலின் தாக்கத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் காலை 6.30 முதல் 10.30 மணி செயல்படும் என்று அந்த மாநில முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவிப்பு இன்று முதல் (மார்ச் 21) முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதிகரித்துவரும் வெப்பநிலையால் மாணவர்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் பார்த்துக்கொள்ளப் பள்ளியில் மாணவர்களுக்கு தண்ணீர் மற்றும் ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்படுகிறது. மாணவர்களை வெய்யிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எஃப்ஐஆர் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: உள்விசாரணை அறிக்கைக்காகக் காத்திருப்பதாகக் கூறி, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரிய ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.நீ... மேலும் பார்க்க

கழிவுநீர்த் தொட்டி தூய்மைப் பணியில் பலியானவர்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு! உச்ச நீதிமன்றம் கெடு!

கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் பணியின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கழிவுநீர்த் தொட்டிகளை மனிதர்களைக் கொண்டு சுத்தம... மேலும் பார்க்க

தயிர் சாதம் சாப்பிட்ட மூன்று குழந்தைகள் பலி; சிகிச்சையில் தாய்! என்ன நடந்தது?

ஹைதராபாத் அருகே தயிர் சாதம் சாப்பிட்ட மூன்று குழந்தைகள் வெள்ளிக்கிழமை அதிகாலை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும், குழந்தைகளின் தாயும் ஆசிரியருமான லாவண்யா, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப... மேலும் பார்க்க

முதல்வர் யோகியின் நல்லாட்சி; விமர்சிக்கும் இணையவாசிகள்!

ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் ஒன்றிணைந்தால்தான், நல்லாட்சி அமையும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.உத்தரப் பிரதேசத்தில் `விகாஸித் பாரத் இளைஞர் நாடாளுமன்ற விழா 2025’ குறித்து... மேலும் பார்க்க

பஞ்சாப் போராட்டம்: 5 மாத உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்ட விவசாயி!

ஹரியாணா எல்லையில் பஞ்சாப் விவசாயிகளை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை பஞ்சாப் அரசு அகற்றியது.குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள், கடந்தாண்டு பிப்ரவரியில் போர... மேலும் பார்க்க

ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: எங்கு, எப்போது தெரியும்?

இந்த 2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம், அதுவும் நாளை சனி அமாவாசையன்று நிகழ்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வந்து முறைக்கும்போது தற்காலிகமாக சூரியன் மறைக்கப்படும் நிகழ்வே நாளை சூரிய கிரகண... மேலும் பார்க்க