செய்திகள் :

பாங்காக்: நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த 30 மாடி கட்டடம்... 43 பேரின் கதி என்ன?

post image

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தாய்லந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் 30 மாடி கட்டடம் இடிந்து விழுந்த நிலையில், அதில் சிக்கியிருந்த 43 பேரை மீட்புப் பணியினர் தேடி வருகின்றனர்.

மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மியான்மரின் சாகெய்ங் நகரின் வடமேற்கில் 16 கி.மீ தொலைவில் மதியம் 12.50 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

பூமியின் கீழே 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

நிலநடுக்கம் உணரப்பட்டு 12 நிமிடங்களில் சாகெய்ங் நகரின் தெற்கே 18 கி.மீ தொலைவில் 6.4 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பல இடங்களில் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு, கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

மியான்மரின் டௌங்கோ நகரில் தொழுகை நடைபெற்றபோது மசூதி இடிந்து விழுந்ததால் 3 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

பாங்காக் நகரில் ஏற்பட்ட பாதிப்புகள்

மியான்மரைப் போலவே தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரிலும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பாங்காக்கில் சில பகுதிகளில் ரயில், மெட்ரோ சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாங்காக் நகரில் பல பகுதிகள் மோசமாக பாதிப்படைந்து வடக்குப் பகுதியில் கட்டப்பட்டு வந்த அரசின் 30 மாடி அலுவலகக் கட்டடம் சில நொடிகளில் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

அந்தக் கட்டடத்தில் 43 பேர் சிக்கியிருந்ததாகக் கூறப்படும் நிலையில் அவர்களின் நிலைமை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

ஒருவர் பலியானதாகவும் 7 பேர் வரை தப்பித்ததாகவும் கூறப்படும் நிலையில் மீட்புப் பணியினர் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பல இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

30 மாடி கட்டடம் இடிந்து விழும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம்: பிரதமர் மோடி கவலை!

இந்த நிலநடுக்கம் சீனா, வங்கதேசம், இந்தியா உள்பட பல பகுதிகளில் உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்: ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்!

அணு ஆயுதத் திட்டம் தொடர்பான அமெரிக்காவின் ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் அவர்கள்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களைக... மேலும் பார்க்க

ரஷிய அதிபா் புதினை கொல்ல சதியா? காா் வெடித்து தீப்பற்றியதால் பரபரப்பு!

ரஷிய அதிபா் புதின் பயன்படுத்தும் காா் திடீரென வெடித்து தீப்பற்றியது. இது அதிபா் விளாதிமீா் புதினை கொல்வதற்கான சதியா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. காா் தீப்பற்றியபோது அதில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் தாக்குதல்: 12 பயங்கரவாதிகள், 9 பொதுமக்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ட்ரோன் (ஆளில்லாத சிறிய ரக விமானம்) தாக்குதலில் 12 பயங்கரவாதிகளும், 9 பொதுமக்களும் உயிரிழந்தனா். பாகிஸ்தானின் பலூசிஸ்தான், கைபா் பக்... மேலும் பார்க்க

டெஸ்லா விற்பனையகங்களுக்கு எதிரே அமெரிக்காவில் மீண்டும் போராட்டம்!

அமெரிக்காவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன காா் விற்பனையகங்களுக்கு எதிரே பொதுமக்கள் மீண்டும் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் எலான் மஸ்க் தலைம... மேலும் பார்க்க

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: அதிகரிக்கும் உயிரிழப்பு!

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரின் மண்டலாய் நகரை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்கட்டமைப்பு சேதம், உள்நாட்டுப் போா் ஆகிய காரணிகளால் ஏற... மேலும் பார்க்க

பசிபிங் பெருங்கடல் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, டோங்கா பிரதான தீவின் வடகிழக்கே 100 கி.மீ. தொலைவில் திங்கள்கிழமை அதிகாலை (உள்ளூா் நேரப... மேலும் பார்க்க