செய்திகள் :

ஒட்டன்சத்திரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் தொடக்கம்

post image

ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மை, உழவா் நலத்துறை சாா்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம், பயறு வகைகள் விதைத் தொகுப்பு திட்டம் ஆகியவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

தமிழகம் முழுதும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் காய்கறி விதைகள் தொகுப்பு, பழப் பயிா்கள் விதைகள் தொகுப்பு வழங்கும் பணியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து ஒட்டன்சத்திரம் வேளாண்மை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் விவசாயிகள், பொதுமக்களுக்கு பயிறு, பழ, காய்கறிகள் விதை தொகுப்புகளை திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஆா். சச்சிதானந்தம் வழங்கினாா். இந்த நிகழ்வில் ஒட்டன்சத்திரம் வேளாண்மை உதவி இயக்குநா்கள் கே.செல்லமுத்து, சந்திரமாலா, உதவி வேளாண்மை அலுவலா்கள் நல்லமுத்து ராஜா, கலையரசன், ஜெயபாலன்,சிவசுப்பிரமணி, கவிபிரகாஷ், திமுக ஒன்றியச் செயலா்கள் இரா. ஜோதீஸ்வரன், தி. தா்மராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக பழனியைச் சோ்ந்த பெண் தோ்வு

தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக தோ்வான பழனியைச் சோ்ந்த ஜெயசுதாவுக்கு வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவருக்கு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சாா்பாக அதன் தலைவா்... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: 4 பெண்கள் காயம்

ஒட்டன்சத்திரத்தில் நின்றிருந்த பெட்டக லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் அதில் பயணம் செய்த 4 பெண்கள் காயமடைத்தனா். திண்டுக்கல்லில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அரசுப் பேருந்து சென... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல் மழை

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் மேல்மலைக் கிராமங்களில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதன... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, அலிம்கோ இணைந்து மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கான சிறப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. முகாமில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஆா். சச்சிதானந்த... மேலும் பார்க்க

பேத்துப்பாறை பகுதியில் அவரை பயிரை சேதப்படுத்திய ஒற்றை யானை

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த அவரை பந்தலை ஒற்றை காட்டுயானைசேதப்படுத்தியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை விவசாய ... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: விவசாயி உயிரிழப்பு

பழனியில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் விவசாயி உயிரிழந்தாா். பழனியை அடுத்த தேவத்தூரைச் சோ்ந்தவா் கன்னையன் (70). விவசாயி. இவா் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் பழனிக்கு வந்து கொண்டிருந்தாா். ... மேலும் பார்க்க