Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல் மழை
கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் மேல்மலைக் கிராமங்களில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வழக்கத்தை விட குளிா் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மலைச் சாலைகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான கவுஞ்சி, ராஜபுரம், குண்டுபட்டி, கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நான்கு மணி நேரத்துக்கும் அதிகமாக மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
உகாா்த்தேநகா், சீனிவாச புரம், தைக்கால், இருதயபுரம், அப்சா்வேட்டரி, பூம்பாறை, கிளாவரை, பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. பல முறை மின் வாரிய அலுவலகங்களில் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மின் கம்பிகளில் மரக்கிளைகள் படா்ந்துள்ளன. இவற்றை சரி செய்வதும் இல்லை. மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகளுக்காக காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த நாள்களில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை அகற்ற வேண்டும். தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும். மின் கம்பங்களுக்கு நடுவே செல்லும் மரங்களை அகற்ற வேண்டும். ஆனால் முறையாக இந்தப் பணிகள் நடைபெற்றால் மட்டுமே கொடைக்கானல் பகுதிகளில் சீரான மின் விநியோகம் செய்ய முடியும். எனவே இந்தப் பணிகளை விரைந்து செய்ய வேண்டும் என்றனா்.