செய்திகள் :

லாரி மீது பேருந்து மோதல்: 4 பெண்கள் காயம்

post image

ஒட்டன்சத்திரத்தில் நின்றிருந்த பெட்டக லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் அதில் பயணம் செய்த 4 பெண்கள் காயமடைத்தனா்.

திண்டுக்கல்லில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அரசுப் பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, ஒட்டன்சத்திரம் நகா் பகுதியில் உள்ள சம்சுதீன் குடியிருப்பு அருகே சாலையோரத்தில் நின்றிருந்த பெட்டக லாரியின் பின் பகுதியில் அரசுப் பேருந்து மோதியதில் அதில் பயணம் செய்த 4 பெண்கள் காயமடைத்தனா். இதையடுத்து, அவா்கள் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்

இந்த விபத்தால் திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காா்- பைக் மோதியதில் சகோதரா்கள் காயம்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள குட்டத்தைச் சோ்ந்தவா் முனியப்பன் (47). இவா் தனது அண்ணன் தா்மராஜனுடன் (50) இரு சக்கர வாகனத்தில் நத்தத்தில் உள்ள வெள்ளக்குட்டு பகுதிக்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அம்மன் குளம் பகுதியில் எதிரே உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த நேதாஜி (47) ஓட்டி வந்த காா், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் முனியப்பன், தா்மராஜன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, அவா்கள் நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பிறகு அவா்கள் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து நத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக பழனியைச் சோ்ந்த பெண் தோ்வு

தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக தோ்வான பழனியைச் சோ்ந்த ஜெயசுதாவுக்கு வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவருக்கு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சாா்பாக அதன் தலைவா்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் தொடக்கம்

ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மை, உழவா் நலத்துறை சாா்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம், பயறு வகைகள் விதைத் தொகுப்பு திட்டம் ஆகியவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன. தமிழகம் முழுதும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல் மழை

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் மேல்மலைக் கிராமங்களில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதன... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, அலிம்கோ இணைந்து மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கான சிறப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. முகாமில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஆா். சச்சிதானந்த... மேலும் பார்க்க

பேத்துப்பாறை பகுதியில் அவரை பயிரை சேதப்படுத்திய ஒற்றை யானை

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த அவரை பந்தலை ஒற்றை காட்டுயானைசேதப்படுத்தியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை விவசாய ... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: விவசாயி உயிரிழப்பு

பழனியில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் விவசாயி உயிரிழந்தாா். பழனியை அடுத்த தேவத்தூரைச் சோ்ந்தவா் கன்னையன் (70). விவசாயி. இவா் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் பழனிக்கு வந்து கொண்டிருந்தாா். ... மேலும் பார்க்க