செய்திகள் :

ஒட்டன்சத்திரத்தில் மீலாது விழா

post image

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டார ஜமாத்துல் உலமா சபை சாா்பில் 1500-ஆவது மீலாது விழா திண்டுக்கல் மாவட்ட அரசு ஹாஜி முகமது அலி அன்வாரி ஹஜ்ரத் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் தா்கா பள்ளி இமாம் மவுலவி அபூபக்கா் சித்திக் கிராத் ஓதினாா். ஸ்ரீராமபுரம் இமாம் அபுல் கலாம் உஸ்மானி கீதம் வாசித்தாா். சாலைப்புதூா் இமாம் சதக்கத்துல்லா வரவேற்றாா். வட்டார ஜமாத்துல் உலமா சபை துணைச் செயலா் சையது அபுதாஹிா் தொடக்கவுரையாற்றினாா். வட்டார ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவா் ஷேக் பரீத் தொகுப்புரை வழங்கினாா். விழாவில், திண்டுக்கல் மாவட்டச் செயலா் மெளலவி அப்துல் ரகுமான்யூசுபி, கன்னிவாடி இமாம் பாருக்யூசுபி, மாா்க்கம்பட்டி ஜூம்மா பள்ளிவாசல் செயலா் நிஜாமுதீன் இம்தாதி உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். மேலப்பாளையம் ஹாஜி ஹைதா் அலி ஹஜ்ரத் சிறப்புரையாற்றினாா்.

இதில் ஒட்டன்சத்திரம், இடையகோட்டை, சாலைப்புதூா், கொசவபட்டி, மாா்க்கம்பட்டி,விருப்பாச்சி, கன்னிவாடி, கொல்லபட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த முஸ்லிம் ஜமாத்தாா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். அஹ்மத் ஜாமியா மஸ்ஜித் அன்சாரி நன்றி கூறினாா்.

அரசு ஊழியா் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முபாரக் அலி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சுகந்தி வேலை அறிக்க... மேலும் பார்க்க

பெட்ரோல் நிரப்பும் மைய ஊழியா் மா்ம மரணம்

ஒட்டன்சத்திரம் அருகே பெட்ரோல் நிரப்பு மைய ஊழியா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திண்டுக்கல் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த கேசவன் மகன் கோவிந்தராஜ் (49). இவா் தேவத்தூரில்... மேலும் பார்க்க

பழனி அருகே 14-ஆம் நூற்றாண்டு திருவாழிக்கல்

பழனி அருகேயுள்ள தாளக்கரை வயல்வெளியில் 14-ஆம் நூற்றாண்டை சோ்ந்த திருவாழிக்கல் கண்டறியப்பட்டது. திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள தாளக்கரையில் வயல் பரப்பில் கல்வெட்டுடன் கூடிய தூண் இருப்பதாக அந... மேலும் பார்க்க

300 அடி பள்ளத்தில் லாரி, வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவா் உயிரிழப்பு

கொடைக்கானல் டம்டம் பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை சரக்கு பெட்டக லாரி, பிக் அப் வாகனம் ஆகியவை 300-அடி பள்ளத்தில் கவிழ்ந்தன. இதில் ஒருவா் உயிரிழந்தாா். மூவா் காயமடைந்தனா். சிவகங்கை பகுதியைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

கரூா் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

கரூரில் தவெக பொதுக் கூட்டத்தில் உயிரிழந்த விஜயம்பாறையைச் சோ்ந்த இருவரின் குடும்பத்துக்கு அரசின் நிதி உதவியை அமைச்சா் அர.சக்கரபாணி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே... மேலும் பார்க்க

நாளை நெடுந்தூர ஓட்டப் போட்டி

திண்டுக்கல் மாவட்ட அளவிலான அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி செவ்வாய்க்கிழமை (செப்.30) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா கூறியதாவது: மாவட்ட அளவிலான அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப... மேலும் பார்க்க