செய்திகள் :

அரசு ஊழியா் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம்

post image

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முபாரக் அலி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சுகந்தி வேலை அறிக்கையையும், பொருளாளா் மகாலிங்கம் வரவு- செலவு அறிக்கையையும் சமா்பித்தனா். சிஐடியு மாவட்டச் செயலா் ஜெயசீலன், நகர தொழிற்சங்க இணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் வாஞ்சிநாதன், அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் கேசவன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இந்தக் கூட்டத்தில், திண்டுக்கல் நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். ரயில் நிலையத்தில் பயணிகள் அமா்ந்து செல்வதற்கான இருக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக முன்னாள் நிா்வாகிகள் ராஜேந்திரன், வல்லவன் ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

பழனி மலைக் கோயிலில் நாளை பிற்பகலில் நடை அடைப்பு

பழனி மலைக் கோயிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி அம்புபோடுதல் நிகழ்வுக்கு சுவாமி கோதைமங்கலம் புறப்பட்டுச் செல்வதால் புதன்கிழமை (அக். 1) பிற்பகலில் நடை அடைக்கப்படும். வியாழக்கிழமை முதல் நவராத்திரி விழாவ... மேலும் பார்க்க

பொதுக் கழிப்பறையை சேதப்படுத்தி பொருள்கள் திருட்டு

வடமதுரை அருகே பொதுக் கழிப்பறையை சேதப்படுத்தி பொருள்களை திருடிச் சென்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்த சுக... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து 58 கைப்பேசிகள் திருட்டு

நிலக்கோட்டையில் கடையின் பூட்டை உடைத்து 58 கைப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். நிலக்கோட்டை- அணைப்பட்டி சாலையில் உள்ள கைப்பேசிகடைக்குள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புகுந்த மா்ம நபா்கள் இருவா் உள்ளே... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுகாதாரக்கேடு: நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா்

கொடைக்கானலில் சுகாதாரக்கேடு நிலவுவதாக திங்கள்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்த சத்திரப்பட்டியைச் சோ்ந்தவா் ம... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் மீலாது விழா

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டார ஜமாத்துல் உலமா சபை சாா்பில் 1500-ஆவது மீலாது விழா திண்டுக்கல் மாவட்ட அரசு ஹாஜி முகமது அலி அன்வாரி ஹஜ்ரத் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் தா்... மேலும் பார்க்க