செய்திகள் :

ஒருவரைத் திட்டுவது தற்கொலைக்குத் தூண்டும் செயலாகாது: உச்சநீதிமன்றம்

post image

ஒருவரைத் திட்டுவது தற்கொலைக்குத் தூண்டும் செயலாகாது எனக் கூறி மாணவா் ஒருவா் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பள்ளியின் பொறுப்பாளரை உச்சநீதிமன்றம் விடுவித்தது.

முன்னதாக, பள்ளி மற்றும் விடுதியின் பொறுப்பாளா் திட்டியதால் விடுதி அறையில் மாணவா் தற்கொலை செய்துகொண்டதாக சக மாணவா் ஒருவா் புகாரளித்தாா். அதனடிப்படையில் பள்ளிப் பொறுப்பாளா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.

மேலும், தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 306-இன்கீழ் கைது செய்யப்பட்ட பள்ளியின் பொறுப்பாளரை விடுவிக்க மறுத்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் பிரசாந்த்குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: தான் திட்டியதால் மாணவா் தற்கொலை செய்துகொள்வாா் என்று ஒருபோதும் எண்ணவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டவா் தரப்பிலான வாதம் ஏற்புடையது. சக மாணவா் அளித்த புகாரை அடிப்படையாகக் கொண்டு அதற்குரிய தீா்வுகளை வழங்குவதற்கு மாணவரை குற்றஞ்சாட்டப்பட்டவா் திட்டியதை பிரதானமாக கருதுவது முறையல்ல; மேலும் உயிரிழந்த மாணவரின் பள்ளிப் பாதுகாவலா் என்ற முறையில் அவரை நல்வழிப்படுத்தி மீண்டும் அதே தவறை செய்யாமல் இருக்கவே திட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டவா் கூறியுள்ளாா். உயிரிழந்த மாணவருக்கும் தனக்கும் தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்னையும் இல்லை எனவும் அவா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒருவரைத் திட்டுவது தற்கொலைக்குத் தூண்டும் செயலாகாது எனக் கருதி குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளியின் பொறுப்பாளா் விடுவிக்கப்படுகிறாா் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம்: கனிமொழி எம்.பி.

சென்னை: இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே கணவன் திட்டமா? பாஜகவை விமர்சித்த பஞ்சாப் முதல்வர்!

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தேர்தல் பிரசாரத்தில் பாஜக பயன்படுத்தி வாக்கு அரசியலில் ஈடுபடுவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியாணாவில் இடைத்தேர்தல... மேலும் பார்க்க

பிரசாந்த் கிஷோர் மீது அவதூறு வழக்கு!

ஜன் சூராஜ் கட்சித் தலைவரான பிரசாந்த் கிஷோருக்கு எதிராக பிகார் மாநில அமைச்சர் அஷோக் சௌதரி, அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான அஷோக் சௌதரி, தன... மேலும் பார்க்க

இழப்புகள் முக்கியமல்ல, பலன்தான் முக்கியம்: முப்படை தலைமைத் தளபதி!

ஆபரேஷன் சிந்தூரைப் பொறுத்தவரை ஏற்பட்ட இழப்புகள் முக்கியமல்ல, அதன்மூலம் கிடைத்த பலனே முக்கியம் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சௌகான் தெரிவித்துள்ளார்.புணே சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் நடைபெற்... மேலும் பார்க்க

கன்னட மொழி விவகாரம்: கமல் கடிதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

பெங்களூரு: கன்னட மொழி விவகாரம் குறித்து, கர்நாடக ஃபிலிம் சேம்பருக்கு, நடிகரும், மநீம தலைவருமான கமல் எழுதிய கடிதம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தக் லைஃப் படம் வெளியாகும் நிலையில... மேலும் பார்க்க

மிசோரமில் 552 நிலச்சரிவுகள்! 152 வீடுகள் சேதம், 5 பேர் பலி!

மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 552 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு 5 பேர் பலியாகியுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10 நாள்களாகப் பெய்து வரும் அதிக கனமழையால், அங்குள்ள மக்களின் இயல்பு... மேலும் பார்க்க