செய்திகள் :

ஒரே அம்பு, இரு இலக்குகள்! மோடிக்கு மட்டும் 75 வயது ஆகவில்லை! - ஜெயராம் ரமேஷ்

post image

பிரதமர் மோடி ஓய்வு பெற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் எவ்வளவு அழகாகக் கூறியுள்ளார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும், மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியது பற்றி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு வருகிற செப்டம்பர் மாதத்துடன் 75 வயது பூர்த்தியாகிறது. அவரை மறைமுகமாகக் குறிப்பிட்டுதான் ஆர்எஸ்எஸ் தலைவர் இவ்வாறு பேசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில்,

"விருது பெற்ற ஏழை பிரதமர்! செப்டம்பர் 17, 2025 அன்று 75 வயதாகிறது என்பதை மோடிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் எவ்வளவு அழகாக நினைவுபடுத்தியுள்ளார்!

ஆனால், பிரதமரும் ஆர்எஸ்எஸ் தலைவரிடம் சொல்லலாம். உங்களுக்கும்(மோகன் பகவத்) வருகிற செப்டம்பர் 11, 2025 அன்று 75 வயதாகிறது என்று!

ஒரே அம்பு, இரு இலக்குகள்!" என்று நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.

Congress Jairam Ramesh takes dig at PM Modi after RSS chief retirement age remarks

75 வயதில் ஓய்வுபெற வேண்டும்! பிரதமர் மோடியைச் சொல்கிறாரா ஆர்எஸ்எஸ் தலைவர்?

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க