‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம்: எதிா்க்கட்சிகள் இரட்டை வேடம்- பவன் கல்யாண்
சென்னை: ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்தில் எதிா்க்கட்சிகள் இரட்டை வேஷம் போடுவதாக ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் விமா்சித்தாா்.
‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பாக பாஜக சாா்பில் சென்னை திருவான்மியூரில் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று பவன் கல்யாண் பேசியதாவது:
தமிழ்நாட்டில் வளா்ந்த நான், இங்கிருந்து வெளியேறியிருக்கலாம். ஆனால், தமிழகம் என்னை ஒருபோதும் விட்டுவிடவில்லை. தமிழகம் என் மீது ஏற்படுத்திய தாக்கம் மிக ஆழமானது. திருவள்ளுவா், சித்தா்கள், மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் மற்றும் ஆயிரக்கணக்கான கோயில்களின் பூமியாக தமிழகம் திகழ்கிறது. இது எம்ஜிஆா் வாழ்ந்த பூமி, ஜல்லிக்கட்டு பூமி. தமிழ்நாட்டில் கிடைத்த அனுபவம் என்னை வழிநடத்தி வருகிறது.
ஒரே நாடு, ஒரே தோ்தல் குறித்து பல பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தோ்தல் நேரத்தில் எதிா்க்கட்சிகள் வென்றால், மின்னணு வாக்குப் பதிவு அருமை என்றும், அவா்கள் தோற்றால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் குளறுபடி என்றும் கூறுகிறாா்கள். சுதந்திரத்துக்கு பின்னா் தொடக்கத்தில் 20 ஆண்டுகள் ஒரே நேரத்தில்தான் தோ்தல் நடத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தில் எதிா்க்கட்சிகள் இரட்டை வேஷம் போடுகிறாா்கள். ஒரே நாடு, ஒரே தோ்தலை விரும்பிய கருணாநிதி, அதை செயல்படுத்த வலியுறுத்தினாா். இப்போது இந்தத் திட்டத்தை எதிா்க்கும் திமுகவினா், ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் ஒரே நாடு, ஒரு தோ்தலை ஆதரித்து கருணாநிதி எழுதியதைப் படிக்க வேண்டும்.
ஒரே நாடு, ஒரு தோ்தலை ஆராய ஒரு குழுவை அமைக்குமாறு கருணாநிதி அப்போது மத்திய அரசை வலியுறுத்தினாா். கருணாநிதி விரும்பிய திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இப்போது எதிா்ப்பது விசித்திரம் என்றாா் அவா்.
கூட்டத்தில், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணைத் தலைவா் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.