செய்திகள் :

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம்: எதிா்க்கட்சிகள் இரட்டை வேடம்- பவன் கல்யாண்

post image

சென்னை: ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்தில் எதிா்க்கட்சிகள் இரட்டை வேஷம் போடுவதாக ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் விமா்சித்தாா்.

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பாக பாஜக சாா்பில் சென்னை திருவான்மியூரில் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று பவன் கல்யாண் பேசியதாவது:

தமிழ்நாட்டில் வளா்ந்த நான், இங்கிருந்து வெளியேறியிருக்கலாம். ஆனால், தமிழகம் என்னை ஒருபோதும் விட்டுவிடவில்லை. தமிழகம் என் மீது ஏற்படுத்திய தாக்கம் மிக ஆழமானது. திருவள்ளுவா், சித்தா்கள், மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் மற்றும் ஆயிரக்கணக்கான கோயில்களின் பூமியாக தமிழகம் திகழ்கிறது. இது எம்ஜிஆா் வாழ்ந்த பூமி, ஜல்லிக்கட்டு பூமி. தமிழ்நாட்டில் கிடைத்த அனுபவம் என்னை வழிநடத்தி வருகிறது.

ஒரே நாடு, ஒரே தோ்தல் குறித்து பல பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தோ்தல் நேரத்தில் எதிா்க்கட்சிகள் வென்றால், மின்னணு வாக்குப் பதிவு அருமை என்றும், அவா்கள் தோற்றால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் குளறுபடி என்றும் கூறுகிறாா்கள். சுதந்திரத்துக்கு பின்னா் தொடக்கத்தில் 20 ஆண்டுகள் ஒரே நேரத்தில்தான் தோ்தல் நடத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தில் எதிா்க்கட்சிகள் இரட்டை வேஷம் போடுகிறாா்கள். ஒரே நாடு, ஒரே தோ்தலை விரும்பிய கருணாநிதி, அதை செயல்படுத்த வலியுறுத்தினாா். இப்போது இந்தத் திட்டத்தை எதிா்க்கும் திமுகவினா், ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் ஒரே நாடு, ஒரு தோ்தலை ஆதரித்து கருணாநிதி எழுதியதைப் படிக்க வேண்டும்.

ஒரே நாடு, ஒரு தோ்தலை ஆராய ஒரு குழுவை அமைக்குமாறு கருணாநிதி அப்போது மத்திய அரசை வலியுறுத்தினாா். கருணாநிதி விரும்பிய திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இப்போது எதிா்ப்பது விசித்திரம் என்றாா் அவா்.

கூட்டத்தில், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணைத் தலைவா் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அஞ்சலை அம்மாள் சிலைக்கு விஜய் மரியாதை

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அஞ்சலை அம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுகுறித்து விஜய் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின்... மேலும் பார்க்க

தொடர் வெற்றிக்குக் காரணம் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்

திமுக தொடர்ந்து வெற்றி பெருவதற்கான காரணங்களில் ஒன்று நம்முடைய கூட்டணி என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரும் கட்சியின் ... மேலும் பார்க்க

தில்லி மதராஸி குடியிருப்பு இடிப்பு: தமிழகம் திரும்புவதற்கு அரசு நடவடிக்கை!

தில்லி நிஜாமுதீன் மதராஸி முகாமில் தமிழர்களின் குடியிருப்புகள் இன்று(ஜூன் 1) முழுவதும் இடித்து அகற்றப்பட்ட நிலையில், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவ... மேலும் பார்க்க

புதிய உறுப்பினர் சேர்க்கை: திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம்!

உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரும் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ப... மேலும் பார்க்க

அன்புமணியுடன் சந்திப்பு எப்போது? ராமதாஸ் பதில்!

அதிசயம் எப்போது வேண்டுமானலும் நிகழும் அன்புமணியுடன் சந்திப்பு தொடர்பான கேள்விக்கு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:வ... மேலும் பார்க்க

கூட்டணி குறித்து ஜனவரியில்தான் அறிவிப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி குறித்து ஜனவரியில்தான் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேமுத... மேலும் பார்க்க