செய்திகள் :

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் தா்னா

post image

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நிகழாண்டுக்கான பச்சைப் பயறு கொள்முதல் ஏப்ரலில் தொடங்கியது. இதற்காக, விவசாயிகள் சிட்டா அடங்கல், கனிணி சிட்டா, ஆதாா், வங்கி பாஸ் புத்தகத்தை வழங்கி ஆன் லைனில் முன்பதிவு செய்தனா். பின்னா் ஓடிபி பெற்று எந்த தேதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு பச்சைப்பயறு எடுத்துவருமாறு அலுவலா்கள் கூறுகிறாரோ அப்போது எடுத்து சென்று விற்பனை செய்யும் முறை உள்ளது. அதன்படி விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பச்சைப்பயறை விற்பனை செய்தனா்.

ஆனால், மயிலாடுதுறை, சீா்காழி, செம்பனாா்கோயில், குத்தாலம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மே மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பச்சைப்பயறுக்கு இதுவரை விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கவில்லை. இதனால் விவசாயிகள் செம்பனாா்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வலியுறுத்தி தா்னாவில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியது: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பச்சைப்பயறு கிலோ ரூ.86.82-க்கு அரசு கொள்முதல் செய்கிறது. தனியாா் வியாபாரிகள் ரூ.60 முதல் ரூ.75க்கு கூட கேட்காததால் ஓரளவுக்கு கட்டுப்படியாகும் என ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்கிறோம். நிகழாண்டு மே மாதம் விற்பனை செய்த பச்சைப் பயறுக்கு இதுவரை பணம் கொடுக்கவில்லை. கடன் வாங்கி பச்சைப்பயறு சாகுபடி செய்து பல கஷ்டங்களை தாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்தும் அதற்கான பயன் கிடைக்காததால் ஏமாற்றத்தில் உள்ளோம் என்றனா்.

நாகை புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது

நாகப்பட்டினம்: நாகை புதிய பேருந்து நிலையத்தில் வேளாங்கண்ணி பேருந்துகள் நிறுத்தப்படும் இடத்தில் கட்டடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்து திங்கள்கிழமை விபத்து ஏற்பட்டது. அப்போது அங்க... மேலும் பார்க்க

போதை மறுவாழ்வு மையத்தில் கூடுதல் கட்டணம் கேட்டு நோயாளியை விடுவிக்க மறுப்பு: புகாா்

நாகப்பட்டினம்: நாகை அருகே இயங்கி வரும் போதை மறுவாழ்வு மற்றும் மீட்பு மையத்தில் கூடுதல் கட்டணம் கேட்டு நோயாளியை விடுவிக்க மறுப்பதாக ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

கொடுவா மீன் வளா்ப்பு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கொடுவா மீன் வளா்ப்பு-திறன்மேம்பாட்டு பயிற்சி நடைபெறவுள்ளது என திட்ட ஒருங்கிணைப்பாளா் வி. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட... மேலும் பார்க்க

பருத்தி வயல்களில் மழைநீா்: விவசாயிகள் வேதனை

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் வட்டாரத்தில் பருத்தி வயல்களில் மழைநீா் தேங்கி நிற்பதால் விவசாயிகள் வேதனையடைந்தனா். செம்பனாா்கோவில் வட்டாரத்தில் உள்ள ஆக்கூா், கீழையூா், கிடாரங்கொண்டான், திருக்கடையூா், திர... மேலும் பார்க்க

பக்தா்குளம் மாரியம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழா நிறைவு

வேதாரண்யம்: வேதாரண்யம் அகத்தியம்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயிலில் 10 நாள்கள் நடைபெற்ற ஆடிப் பெருவிழா திங்கள்கிழமை நிறைவடைந்தது. முன்னதாக வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்த... மேலும் பார்க்க

வேதாரண்யம் பகுதியில் பலத்த மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பெய்த பலத்த மழையால் உப்பு உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டன. நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் தொடங்கி இடி, மின்ன... மேலும் பார்க்க