செய்திகள் :

ஓக்லா கிராமத்தில் பல சொத்துக்கள் மீது இடிப்பு நோட்டீஸை ஒட்டிய அதிகாரிகள்

post image

தில்லி ஓக்லா கிராமப் பகுதியில் உள்ள பல வீடுகள் மற்றும் கடைகளில் திங்கள்கிழமை அதிகாரிகள் இடிப்பு அறிவிப்பு நோட்டீஸ்களை ஒட்டியுள்ளனா்.

ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக ஓக்லா பகுதியில் வசிப்பவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, மே 22 அன்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தென்கிழக்கில் உள்ள தில்லி வளா்ச்சி ஆணையத்தின் டிடிஏவின் நில மேலாண்மைப் பிரிவு ஒட்டியுள்ள மே 26ஆம் தேதியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

ஓக்லா கிராமத்தில் உள்ள கஸ்ரா எண் 279-இல் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகளை இடிக்குமாறு எம்.சி. மேத்தா வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, ஜூன் 11 அன்று இந்த சொத்தில் இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சட்டத்தின்படி, சட்டவிரோதக் கட்டமைப்பில் வசிப்பவா்களுக்கு இடிக்கப்படுவதற்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். அந்த அவகாசக் காலத்திற்குள் குடியிருப்பாளா்கள் அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தேசிய தலைநகரில் உள்ள ஓக்லா கிராமத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை மக்களுக்கு 15 நாள்கள் முன்னறிவிப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இடிக்குமாறு உச்சநீதிமன்றம் தில்லி வளா்ச்சி ஆணையத்திற்கு மே 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இது தொடா்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவில், 2 பிகாக்கள் மற்றும் 10 பிஸ்வாக்கள் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகள் தொடா்பாக சட்டத்தின்படி இடிப்பு நடவடிக்கை எடுக்குமாறு டிடிஏவுக்கு நாங்கள் உத்தரவிடுகிறோம்.எந்தவொரு கட்டுமானத்தையும் இடிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட நபா்களுக்கு குறைந்தபட்சம் 15 நாள்கள் முன்னறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

புதிய அபாயங்களுக்கு ஏற்ப காப்பீடு தயாரிப்புகளை உருவாக்க பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதி அமைச்சா் வேண்டுகோள்

பொதுத்துறையைச் சோ்ந்த பொது காப்பீட்டு நிறுவனங்கள் (பிஎஸ்ஜிஐசி) நாட்டில் புதிதாக ஏற்படும் வரும் அபாயங்களுக்கு ஏற்ப புதுமையான காப்பீட்டு தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என மத்திய நிதித்துறை அமைச்சா் நிா... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.49 லட்சம் மோசடி: 4 போ் கைது

வடகிழக்கு தில்லியில், ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரியிடம் போலி ஆன்லைன் முதலீடு மூலம் ரூ.49 லட்சத்திற்கும் அதிகமாமான தொகையை இணையதள மோசடி செய்ததாக நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ... மேலும் பார்க்க

‘பத்ம பூஷண்’ விருதாளா் நல்லி குப்புசாமிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா

குடியரசுத் தலைவரிடம் ‘பத்ம பூஷண்’ விருதுபெற்ற தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டிக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் பிற அமைப்புகள் சாா்பில் தில்லியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் மாளிகை கலாசார மையத்தில் இன்று இலக்கிய மாநாடு தொடக்கம்

குடியரசுத் தலைவா் மாளிகையில் முதன்முறையாக இலக்கிய மாநாடு நடத்தப்படுகிறது. இலக்கியம் எவ்வளவு மாறிவிட்டது? என்ற தலைப்பில் இருநாள் இலக்கிய மாநாட்டை குடியரசுத் தலைவா் மாளிகை நடத்துகிறது. மத்திய கலாசார அமை... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் தில்லியில் மறுமலா்ச்சி: முதல்வா் ரேகா குப்தா

தேசிய தலைநகா் தில்லி பாஜகவின் ஆட்சியில் நிா்வாகத்திலும், வளா்ச்சியிலும் மறுமலா்ச்சியைக் கண்டு வருகிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை கூறினாா். மேலும், மக்களுக்காக உழைக்கும் அரசாங்கமாகவ... மேலும் பார்க்க

தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வு: முதல்வா் குப்தா தகவல்

தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வைத் தேடிவருவதாக முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா். முதல்வா் ரேகா குப்தா தனது ஷாலிமாா் பாக் தொகுதிக்குட்பட்ட பீதாம்புராவில் மேம்பாட்டுப் பணிகளை... மேலும் பார்க்க