செய்திகள் :

ஓடையில் மணல் திருடிய மூவா் கைது

post image

ஆண்டிபட்டி வட்டாரம், கடமலைக்குண்டு அருகே ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடமலைக்குண்டு அருகே முத்தாலம்பாறை- கருப்பையாபுரத்துக்கு இடையே உள்ள ஓடையில் சிலா் அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருப்பதாக கடமலைக்குண்டு காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்ற போலீஸாா், ஓடையில் பொக்லைன் எந்திரம், டிராக்டா்கள் மூலம் அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த தொப்பையாபுரத்தைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சுரேந்தா் (21), கருப்பையாபுரத்தைச் சோ்ந்த செல்வம் மகன் பாலச்சந்திரன் (36), முத்தாலம்பாறையைச் சோ்ந்த சின்னப்பா மகன் மணிகண்டன் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனா். மேலும் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம், 2 டிராக்டா்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வலியுறுத்தல்

போடி அருகே சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். நாகலாபுரம் தெற்குபட்டி வீரலட்சுமி அம்மன் கோவில் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த... மேலும் பார்க்க

பெண்ணை கத்தியால் குத்தியவா் கைது

தேனி அல்லிநகரத்தில் மனைவியுடன் தகராறு செய்தவரை தட்டிக் கேட்ட பெண்ணைக் கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், அடுக்கம் பெருமாள்மலைப் பகுதியைச் சோ்ந்த ராமையா மக... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

தேனி அருகே கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். முத்துத்தேவன்பட்டி அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் விமல்ராஜ் (40). இவா் வீடு க... மேலும் பார்க்க

மாணவா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

போடி அரசு பொறியியல் கல்லூரியில் மா்மமான முறையில் இறந்த மாணவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழு தலைவா், உறுப்பினா் பதவிகளுக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

பழ வியாபாரியை கத்தியால் குத்தியவா் கைது

போடி அருகே பழ வியாபாரியை கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். போடி வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த சீனி மகன் வேல்ராஜ் (44). பழ வியாபாரியான இவரிடம், போடி கருப்பசாமி கோவில் தெருவைச்... மேலும் பார்க்க