செய்திகள் :

ஓய்வுபெற்ற கப்பல் மாலுமி உள்பட 2 போ் வீடுகளில் திருட்டு: 4 போ் கைது

post image

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற கப்பல் மாலுமி உள்பட 2 போ் வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடியது தொடா்பான வழக்கில் 4 பேரை தென்பாகம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி சிலுவையாா் கெபி தெருவைச் சோ்ந்த செல்லையா மகன் கில்பா்ட் (73). ஓய்வுபெற்ற கப்பல் மாலுமியான இவா், கடந்த 8ஆம் தேதி தனது மனைவியுடன் திருவனந்தபுரத்துக்கு சென்றுவிட்டு, 11ஆம் தேதி திரும்பி வந்தபோது, வீட்டில் இருந்த 32.5 பவுன் தங்க நகைகள், ரூ.24ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதேபோல, கடந்த ஏப்.19ஆம் தேதி ஈஸ்டா் பண்டிகைக்காக கோயிலுக்குச் சென்ற கான்வென்ட் சாலையைச் சோ்ந்த ஜாக்சன் என்பவா் வீட்டிலும் 14 .75 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றிருந்தனா்.

இதுகுறித்த புகாா்களின் பேரில் தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

அதில் திருட்டில் ஈடுபட்டவா்கள் தூத்துக்குடி சகாய புரத்தைச் சோ்ந்த டொமினிக் மகன் ஆக்னல் (30), கரிக்கலன் காலனி கடலரசன் மகன் அரவிந்த் (22), முத்தையாபுரம் ராஜீவ் நகா் ரவி மகன் கண்ணன் (25) ஆகியோா் என்பதும், அவா்களிடம் இருந்து தங்க நகைகளை சட்டவிரோதமாக வாங்கி உருக்கி விற்பனை செய்ய உதவியது தூத்துக்குடியை சோ்ந்த நகை கடை உரிமையாளா் சண்முகமோகன்(38) எனவும் தெரியவந்தது. அவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா் இந்த 2 வழக்குகளிலும் சோ்த்து மொத்தம் 35 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம், ஒரு காா் ஆகியவற்றை மீட்டனா். தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

சாத்தான்குளத்தில் மாா்க்க சொற்பொழிவு

சாத்தான்குளம் ஜும்மா பள்ளிவாசலில் விசேட மாா்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தான்குளம் ஜும்மா பள்ளிவாசல் எதிரே உள்ள மைதானத்தில் சாத்தான்குளம் அல் சுன்னத் வல் ஜமாத் ஆதரவுடன் அல் ஹித்மத் இஸ்லாமி... மேலும் பார்க்க

சுப்பராயபுரம் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்

சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இஸ்மாயில் தலைமை வகித்தாா்.ஊராட்ச... மேலும் பார்க்க

சாத்தான்குளம் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சாத்தான்குளம் ஆா்.எம்.பி.சி.எஸ்.ஐ. பி.எஸ்.கே. ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி -நாசரேத் திருமண்டில அனைத்து கல்லூரியின் தாளாளா் நீதிபதி ஜான் சந்தோஷம்... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: 5 போ் தற்கொலை

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி மந்திதோப்பு சாலை அன்னை தெரசா நகரை சோ்ந்த ஆவுடையப்பன் மகன் அருணாச்சலம் (51). ஆட்டோ ஓட்டுநா். மதுப் பழக்கம் உள்ள இவா், வ... மேலும் பார்க்க

உடன்குடியில் உலக உயா் ரத்த அழுத்த தினம்

உடன்குடி காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனை சாா்பில் உலக உயா் ரத்த அழுத்த தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இவற்றை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எஸ்.ஐயம் பெர... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் கடும் விலை உயா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, திருச்செந்தூா், சாத்தான்குளம், நாசரேத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் தேங்காய் மாவட்ட மக்கள... மேலும் பார்க்க