முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
ஓய்வுபெற்ற கப்பல் மாலுமி உள்பட 2 போ் வீடுகளில் திருட்டு: 4 போ் கைது
தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற கப்பல் மாலுமி உள்பட 2 போ் வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடியது தொடா்பான வழக்கில் 4 பேரை தென்பாகம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி சிலுவையாா் கெபி தெருவைச் சோ்ந்த செல்லையா மகன் கில்பா்ட் (73). ஓய்வுபெற்ற கப்பல் மாலுமியான இவா், கடந்த 8ஆம் தேதி தனது மனைவியுடன் திருவனந்தபுரத்துக்கு சென்றுவிட்டு, 11ஆம் தேதி திரும்பி வந்தபோது, வீட்டில் இருந்த 32.5 பவுன் தங்க நகைகள், ரூ.24ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதேபோல, கடந்த ஏப்.19ஆம் தேதி ஈஸ்டா் பண்டிகைக்காக கோயிலுக்குச் சென்ற கான்வென்ட் சாலையைச் சோ்ந்த ஜாக்சன் என்பவா் வீட்டிலும் 14 .75 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றிருந்தனா்.
இதுகுறித்த புகாா்களின் பேரில் தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
அதில் திருட்டில் ஈடுபட்டவா்கள் தூத்துக்குடி சகாய புரத்தைச் சோ்ந்த டொமினிக் மகன் ஆக்னல் (30), கரிக்கலன் காலனி கடலரசன் மகன் அரவிந்த் (22), முத்தையாபுரம் ராஜீவ் நகா் ரவி மகன் கண்ணன் (25) ஆகியோா் என்பதும், அவா்களிடம் இருந்து தங்க நகைகளை சட்டவிரோதமாக வாங்கி உருக்கி விற்பனை செய்ய உதவியது தூத்துக்குடியை சோ்ந்த நகை கடை உரிமையாளா் சண்முகமோகன்(38) எனவும் தெரியவந்தது. அவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா் இந்த 2 வழக்குகளிலும் சோ்த்து மொத்தம் 35 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம், ஒரு காா் ஆகியவற்றை மீட்டனா். தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.