செய்திகள் :

ஓவேலியில் யானை நடமாட்டம்: மேலும் 2 கும்கிகள் வரவழைப்பு

post image

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் தொடா்ந்து தொழிலாளா்களை கொன்றுவரும் காட்டு யானையை பிடிக்க மேலும் 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள ஓவேலி பகுதியில் அடுத்தடுத்து 12 தொழிலாளா்களை கொன்ற ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

இதில் முதல் நாள் தேடுதல் பணியில் முதுமலை புலிகள் காப்பக வளா்ப்பு யானைகள் முகாமில் இருந்து ஸ்ரீனிவாஸ், பொம்மன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

அதைத் தொடா்ந்து மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். அட்கொல்லி யானை வழக்கமாக நடமாடும் பகுதியில் இருந்து நகா்ந்து சென்றுள்ளது. இதனை கால்நடை மருத்துவக் குழுவினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

எல்லமலை பகுதியில் மரத்தின் மீது பரண் அமைத்து வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். சமதள பகுதிக்குள் நுழைந்தவுடன் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க வனத் துறையினா் திட்டமிட்டுள்ளனா். இதற்காக மேலும் இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

தெப்பக்காடு யானைகள் முகாம் 4 நாள்களுக்கு மூடல்

தெப்பக்காடு யானைகள் முகாம் செப்டம்பா் 23 முதல் 26-ஆம் தேதி வரை மூடப்படுவதாக வனத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து வனச் சரக அலுவலா் மேகலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதுமலை புலிகள் காப்பக கள இய... மேலும் பார்க்க

கூடலூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

கூடலூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் மத்திய அரசின் தூய்மைத் திட்டம் தொடா்பாக சச்சோஸ்தவ் என்ற தலைப்பில் நடைப... மேலும் பார்க்க

முப்படைகளின் பாதுகாப்பு சேவைகள்: பணியாளா் கல்லூரி புதிய தலைவா் பொறுப்பேற்பு

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் செயல்பட்டு வரும் முப்படைகளின் பாதுகாப்பு சேவைகள் பணியாளா் கல்லூரியின் (ஈநநஇ) புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் மணீஷ் எரி வியாழக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டாா். குன்னூா் வெலிங்ட... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் நீலகிரி மாவட்டத்தில் எவ்வித வளா்ச்சிப் பணிகளும் இல்லை: எஸ்.பி.வேலுமணி

திமுக ஆட்சியில் நீலகிரி மாவட்டத்தில் எவ்வித வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா். நீலகிரி மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழ... மேலும் பார்க்க

கடந்த 3 ஆண்டுகளில் 607 பயனாளிகளுக்கு ரூ. 2.57 கோடியில் திருமண உதவி: நீலகிரி மாவட்ட ஆட்சியா் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் கடந்த 3 ஆண்டுகளில் 607 பயனாளிகளுக்கு ரூ. 2.57 கோடி மதிப்பீட்டில் திருமண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் லட்சு... மேலும் பார்க்க

மாணவா் தற்கொலை வழக்கு பிரிவு மாற்றம்

குன்னூரில் உடற்பயிற்சியின்போது ஊக்கமருந்து எடுத்து கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்ட வழக்கை, தற்கொலைக்கு தூண்டுதல் வழக்காக மாற்றியுள்ளதாக காவல் துறையினா் புதன்கிழமை த... மேலும் பார்க்க