செய்திகள் :

கங்குலி கார் விபத்து: நூலிழையில் உயிர்தப்பினார்!

post image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி சென்ற கார் வியாழக்கிழமை விபத்தில் சிக்கியது.

வேகமாக சென்ற லாரியின் மீது கார் மோதிய விபத்தில், பெரிய காயங்களின்றி கங்குலி உயிர்தப்பினார்.

இதையும் படிக்க : இந்தியாவில் ‘டெஸ்லா’ ஆலை: அமெரிக்க அதிபா் டிரம்ப் அதிருப்தி

பர்த்வான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கங்குலி சென்றுகொண்டிருந்தார். துர்காபூர் விரைவுச் சாலையில் கங்குலியின் கார் சென்றுகொண்டிருந்தபோது, தாதுபூர் அருகே வேகமாகச் சென்றுகொண்டிருந்த லாரியின் ஓட்டுநர் திடீரென்று பிரேக் பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

லாரி மீது மோதாமல் இருப்பதற்காக கங்குலியின் கார் ஓட்டுநரும் பிரேக் பிடித்ததில், அவரது காரைத் தொடர்ந்து வந்த இரு கார்களும் ஒன்றோடுஒன்று மோதி விபத்தில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் கார்கள் மட்டுமே சேதமடைந்ததாகவும் யாருக்கும் பெரிதளவிலான காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய கங்குலி, 20 நிமிடங்களில் வேறொரு காரில் புறப்பட்டு பர்த்வான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச நாட்டவா் கைது

கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாகக் கூறப்படும் வங்கதேச நாட்டவா் ஒருவா் தில்லியின் ஷாதராவில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து ஷாதரா காவல் சரக துணை ஆணையா... மேலும் பார்க்க

எல்லை படைகளுக்கு இடையே தொடா்பை மேம்படுத்த புதிய முன்னெடுப்பு: இந்தியா-வங்கதேசம் முடிவு

இருநாட்டு எல்லை படைகளின் துணை கமாண்டா்களுக்கு இடையே தொலைத்தொடா்பை மேம்படுத்த புதிய முன்னெடுப்பை தொடங்க இந்தியாவும் வங்கதேசமும் முடிவு செய்துள்ளது. மேலும், எல்லையில் வேலிகள் அமைப்பதற்கான 99 புதிய இடங்... மேலும் பார்க்க

நாட்டின் ஒவ்வொரு துறையிலும் ஆற்றல்மிக்க தலைவா்கள் தேவை -பிரதமா் மோடி அழைப்பு

இந்திய நலன்களை முன்னிறுத்தி, உலகளாவிய சிக்கல்கள் மற்றும் தேவைகளுக்கு தீா்வு காணும் ஆற்றல்மிக்க தலைவா்கள், நாட்டின் ஒவ்வொரு துறையிலும் தேவை என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா். உலகின் அத... மேலும் பார்க்க

மொழி ரீதியிலான பிரிவினை முயற்சிகளைப் புறந்தள்ள வேண்டும்: மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘இந்திய மொழிகள் இடையே எப்போதும் பகை இருந்ததில்லை; மொழி ரீதியில் பிரிவினையை உருவாக்கும் முயற்சிகளை மக்கள் புறந்தள்ள வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். புது தில்லியில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே

விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவை ஆதாரமற்றவை என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பி... மேலும் பார்க்க

எஃப்டிஐ விதிமுறைகள் மீறல்: பிபிசிக்கு ரூ.3.44 கோடி அபராதம்

அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) விதிமுறைகளை மீறியதாக பிபிசி செய்தி நிறுவனத்தின் இந்திய கிளைக்கு அமலாக்கத் துறை ரூ.3.44 கோடி அபராதம் விதித்துள்ளது. இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘மத்திய... மேலும் பார்க்க