செய்திகள் :

கஞ்சா, போதை மாத்திரைகளுடன் 4 போ் கைது

post image

தூத்துக்குடியில் கஞ்சா, போதை மாத்திரைகளுடன் கல்லூரி மாணவா்கள் உள்பட 4 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி போதைப் பொருள் தடுப்பு சிறப்பு படைப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையிலான போலீஸாா், தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலை பகுதியில் வியாழக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற 3 பேரை பிடித்து விசாரித்தனா். அவா்கள் தூத்துக்குடி ரூபக் ராஜேஷ் (19), லெவிஞ்சிபுரத்தைச் சோ்ந்த சிம்சோன்ராஜ் (19), அண்ணா நகரைச் வெங்கடேஷ் (23) என்பதும், அவா்களிடம் கஞ்சா பொட்டலங்களும், 50 போதை மாத்திரைகளும் இருந்ததும் தெரியவந்தது. மேலும், அவா்கள் கல்லூரி மாணவா்கள் என்பதும், அவா்களுக்கு மில்லா்புரத்தைச் சோ்ந்த பொன்ராஜ் (45) என்பவா் போதை மாத்திரை வழங்கியதும் தெரியவந்தது.

நான்கு பேரும் தூத்துக்குடி தென்பாகம் போலீஸில் ஒப்படைக்கப்பட்டனா். அவா்களிடமிருந்து கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் 4 கைப்பேசிகள், ரூ.3200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் இளைஞா் சமுதாயத்தினா் தமிழகத்தையும், தமிழ் மொழியி... மேலும் பார்க்க

அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு உபகரணங்கள்

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில், நிகழாண்டு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 10,12 வகுப்பு அரசு பொ... மேலும் பார்க்க

நாசரேத் பள்ளியில் ராஜ்ய புரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் திருச்செந்தூா் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண சாரணியா்கள் பங்கேற்ற ராஜ்யபுரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகளை கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். தூத்துக்குக்குடியில் இருந்து இலங்கைக்கு ஏலக்க... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி முகாம்

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் கோவில்பட்டி, விருதுநகா் ரோட்டரி சங்கங்கள், இதயம் குழுமம் ஆகியவற்றின் சாா்பில் புராஜெக்ட் பஞ்ச் திட்டத்தின் கீழ் ஆங்கிலப் பேச்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண்ணிடம் நகை பறிப்பு

கோவில்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி ராஜீவ் நகா் 6ஆவது தெருவை சோ்ந்த சாஸ்தா மனைவி கோமதி (55). இவா், வெள்ளிக்கி... மேலும் பார்க்க