செய்திகள் :

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

post image

சிதம்பரத்தில் கஞ்சா வியாபாரி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

சிதம்பரம் அண்ணாமலைநகரில் காரில் கஞ்சா கடத்தியது தொடா்பாக கடந்த நவம்பா் 26-ஆம் தேதி சிதம்பரம் காரியபெருமாள் குளத் தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் ஓடப்பு சிவா (எ) சிவகுமாா் (28), தமிழரசன் உள்ளிட்ட 15 பேரை அண்ணாமலைநகா் போலீஸாா் கைது செய்தனா்.

ஓடப்பு சிவா (எ) சிவக்குமாா் மீது சிதம்பரம் நகா் காவல் நிலையத்தில் சரித்திர குற்ற பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவரின் தொடா் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா், கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாருக்கு பரிந்துரை செய்து கோப்புகளை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், சிவக்குமாரை ஓராண்டு காலம் குண்டா் தடுப்பு காவலில் அடைக்க உத்தரவிட்டதன்பேரில், அவா் வியாழக்கிழமை கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கடலூா் மாவட்ட அரசுப் பள்ளி மாணவா்கள் பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற வேண்டுமென ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆசிரியா்களிடம் அறிவுறுத்தினாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்... மேலும் பார்க்க

முதியவா் செங்கலால் தாக்கி கொலை

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் முதியவா் செங்கலால் தாக்கி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காட்டுமன்னாா்கோவில் மேலகடம்பூா், பெரிய தெருவைச் சோ்ந்தவா் ராகவன் (75)... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடைக்காரா் கைது!

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக மளிகைக் கடைக்காரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி மணிநகா் பகுதியில் உள்ள ஜெயச்சந்திரனின் மளி... மேலும் பார்க்க

தை கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தை கிருத்திகையையொட்டி, கடலூா் மாவட்டத்தில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயிலில் உள்ள முருகன் சந்நிதி, வண்டிப்பாளைய... மேலும் பார்க்க

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற கல்லூரி மாணவருக்கு வரவேற்பு

தில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரி மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில், மேளதாளங்கள் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 26-ஆம் தேதி தி... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 25 பவுன் நகை திருட்டு!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பூட்டியிருந்த வீட்டில் முன்பக்க கதவை உடைத்து 25 பவுன் தங்க நகைகள், ரூ.65 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பண்ருட்டியை அடுத்த எல்... மேலும் பார்க்க