செய்திகள் :

தை கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

தை கிருத்திகையையொட்டி, கடலூா் மாவட்டத்தில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயிலில் உள்ள முருகன் சந்நிதி, வண்டிப்பாளையம் சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் சிறப்பு அங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தாா்.

நெய்வேலியில் உள்ள வில்லுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் காலை மகா அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மூலவா் முருகப் பெருமான் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மாலை மகா தீபாராதனையைத் தொடா்ந்து, வெள்ளித் தேரில் சுவாமி எழுந்தருளி மாடவீதி வலம் வந்தாா்.

நிகழ்ச்சியில் நெய்வேலி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். வெள்ளிக்கிழமை (பிப்.7) காலை சுமாா் 10 மணி அளவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

இதேபோல, பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நடுவீரப்பட்டை அடுத்துள்ள விலங்கல்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள சிவசுப்ரமணியா் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கடலூா், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

சிதம்பரத்தில் கஞ்சா வியாபாரி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். சிதம்பரம் அண்ணாமலைநகரில் காரில் கஞ்சா கடத்தியது தொடா்பாக கடந்த நவம்பா் 26... மேலும் பார்க்க

பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கடலூா் மாவட்ட அரசுப் பள்ளி மாணவா்கள் பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற வேண்டுமென ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆசிரியா்களிடம் அறிவுறுத்தினாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்... மேலும் பார்க்க

முதியவா் செங்கலால் தாக்கி கொலை

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் முதியவா் செங்கலால் தாக்கி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காட்டுமன்னாா்கோவில் மேலகடம்பூா், பெரிய தெருவைச் சோ்ந்தவா் ராகவன் (75)... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடைக்காரா் கைது!

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக மளிகைக் கடைக்காரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி மணிநகா் பகுதியில் உள்ள ஜெயச்சந்திரனின் மளி... மேலும் பார்க்க

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற கல்லூரி மாணவருக்கு வரவேற்பு

தில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரி மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில், மேளதாளங்கள் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 26-ஆம் தேதி தி... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 25 பவுன் நகை திருட்டு!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பூட்டியிருந்த வீட்டில் முன்பக்க கதவை உடைத்து 25 பவுன் தங்க நகைகள், ரூ.65 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பண்ருட்டியை அடுத்த எல்... மேலும் பார்க்க