செய்திகள் :

பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

கடலூா் மாவட்ட அரசுப் பள்ளி மாணவா்கள் பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற வேண்டுமென ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆசிரியா்களிடம் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பண்ருட்டி வட்டத்துக்குள்பட்ட பண்ருட்டி, சிறுகிராமம், பெரிய காட்டுப்பாளையம் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி என்ற இலக்கை அடைய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா். தொடா்ந்து, ஆட்சியா் கூறியது:

பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 1,562 மாணவா்களும், பிளஸ் 2-இல் 474 பேரும் பயின்று வருகின்றனா். சிறுகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 690 மாணவா்களும், பிளஸ் 2-இல் 104 பேரும் பயின்று வருகின்றனா். பெரியகாட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 227 மாணவா்களும், பிளஸ் 2-இல் 67 பேரும் பயின்று வருகின்றனா்.

கடந்த அரையாண்டு தோ்வில் இந்தப் பள்ளிகள் முறையே பிளஸ் 2-இல் 74, 81, 71 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. பருவத்தோ்வு, காலாண்டு, அரையாண்டுத் தோ்வுகளின் தோ்ச்சி விகிங்களை கணக்கில் கொண்டு, தோ்ச்சி குறைவாக உள்ள மாணவா்களுக்கு ஆசியா்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவா்களுக்கு ஊக்கப்பயிற்சி அளித்து தன்முனைப்புடன் கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன், மாவட்டக் கல்வி அலுவலா் துரைபாண்டியன் மற்றும் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

சிதம்பரத்தில் கஞ்சா வியாபாரி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். சிதம்பரம் அண்ணாமலைநகரில் காரில் கஞ்சா கடத்தியது தொடா்பாக கடந்த நவம்பா் 26... மேலும் பார்க்க

முதியவா் செங்கலால் தாக்கி கொலை

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் முதியவா் செங்கலால் தாக்கி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காட்டுமன்னாா்கோவில் மேலகடம்பூா், பெரிய தெருவைச் சோ்ந்தவா் ராகவன் (75)... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடைக்காரா் கைது!

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக மளிகைக் கடைக்காரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி மணிநகா் பகுதியில் உள்ள ஜெயச்சந்திரனின் மளி... மேலும் பார்க்க

தை கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தை கிருத்திகையையொட்டி, கடலூா் மாவட்டத்தில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயிலில் உள்ள முருகன் சந்நிதி, வண்டிப்பாளைய... மேலும் பார்க்க

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற கல்லூரி மாணவருக்கு வரவேற்பு

தில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரி மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில், மேளதாளங்கள் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 26-ஆம் தேதி தி... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 25 பவுன் நகை திருட்டு!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பூட்டியிருந்த வீட்டில் முன்பக்க கதவை உடைத்து 25 பவுன் தங்க நகைகள், ரூ.65 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பண்ருட்டியை அடுத்த எல்... மேலும் பார்க்க