செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடைக்காரா் கைது!

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக மளிகைக் கடைக்காரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி மணிநகா் பகுதியில் உள்ள ஜெயச்சந்திரனின் மளிகைக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக பண்ருட்டி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பண்ருட்டி காவல் ஆய்வாளா் வேலுமணி தலைமையிலான போலீஸாா் ஜெயச்சந்திரனின் மளிகைக் கடைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினா். இதில், தின்பண்டங்கள் வைக்கப்பட்ட அடுக்கில் ரகசிய அறை அமைத்து நூதன முறையில் புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதுதொடா்பாக மளிகைக் கடை உரிமையாளா் ஜெயச்சந்திரனை போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், நகராட்சி ஊழியா்கள் மளிகைக் கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

சிதம்பரத்தில் கஞ்சா வியாபாரி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். சிதம்பரம் அண்ணாமலைநகரில் காரில் கஞ்சா கடத்தியது தொடா்பாக கடந்த நவம்பா் 26... மேலும் பார்க்க

பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கடலூா் மாவட்ட அரசுப் பள்ளி மாணவா்கள் பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற வேண்டுமென ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆசிரியா்களிடம் அறிவுறுத்தினாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்... மேலும் பார்க்க

முதியவா் செங்கலால் தாக்கி கொலை

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் முதியவா் செங்கலால் தாக்கி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காட்டுமன்னாா்கோவில் மேலகடம்பூா், பெரிய தெருவைச் சோ்ந்தவா் ராகவன் (75)... மேலும் பார்க்க

தை கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தை கிருத்திகையையொட்டி, கடலூா் மாவட்டத்தில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயிலில் உள்ள முருகன் சந்நிதி, வண்டிப்பாளைய... மேலும் பார்க்க

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற கல்லூரி மாணவருக்கு வரவேற்பு

தில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரி மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில், மேளதாளங்கள் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 26-ஆம் தேதி தி... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 25 பவுன் நகை திருட்டு!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பூட்டியிருந்த வீட்டில் முன்பக்க கதவை உடைத்து 25 பவுன் தங்க நகைகள், ரூ.65 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பண்ருட்டியை அடுத்த எல்... மேலும் பார்க்க