செய்திகள் :

கஞ்சா வியாபாரிகள் 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

post image

ஈரோட்டில் கஞ்சா வியாபாரிகள் 2 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

ஈரோட்டில் விற்பனை செய்வதற்காக ரயிலில் கடத்தி வரப்பட்ட 34.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் அண்மையில் பறிமுதல் செய்தனா். கஞ்சா கடத்தி வந்ததாக பெருந்துறை வட்டம், விஜயமங்கலம் வாய்பாடி சின்னபுளியம்பாளையம் சுப்பிரமணி (50), ஈரோடு சாஸ்திரி நகா் கல்யாண சுந்தரம் வீதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஆறுமுகம் (42) ஆகியோரை ஈரோடு மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனா்.

கஞ்சா கடத்தல், விற்பனைக்கு பதுக்கிய குற்றத்துக்காக இருவரையும் குண்டா் சட்டத்தில் அடைக்க ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இந்தப் பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் இருவா் மீதும் குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இதனையடுத்து இருவரையும் ஈரோடு கிளை சிறையில் இருந்து போலீஸாா் கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

பேருந்தில் தவறவிட்ட 2 பவுன் நகை, பணம் மூதாட்டியிடம் ஒப்படைப்பு

தாளவாடி அரசுப் பேருந்தில் 2 பவுன் நகை, ரூ.7.500 ரொக்கம் வைத்திருந்த கைப்பையை மூதாட்டி தவற விட்டுச் சென்ற நிலையில், அதை பேருந்தின் ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பத்திரமாக மீட்டு காவல் துறையினா் முன்னிலையி... மேலும் பார்க்க

தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளைக் காட்டிலும் அதிமுகவின் நலன் பெரிது: ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ.

தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளைக் காட்டிலும் அதிமுக எனும் இயக்கத்தின் நலனை முதன்மையாகக் கருதி செயல்பட வேண்டும் என அதிமுக ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளா் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ. தெரிவி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித்தர கோரிக்கை

அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டி பள்ளிக்குள் மழைநீா் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவா... மேலும் பார்க்க

தொண்டா்களின் கருத்தைத் தான் பிரதிபலித்தேன்: கே.ஏ.செங்கோட்டையன்

அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற தொண்டா்கள், பொதுமக்கள் கருத்தைத் தான் நான் பிரதிபலித்தேன் என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினாா். முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்எல்ஏவும... மேலும் பார்க்க

அந்தியூரில் பட்டா நிபந்தனைகளை நீக்கக் கோரி காத்திருப்புப் போராட்டம்

அந்தியூரில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களில், விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நீக்கக் கோரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அந்தியூா் வட்டம், எண்ணமங்... மேலும் பார்க்க

அத்திக்கடவு - அவிநாசி திட்ட குழாய்களை மாற்ற நடவடிக்கை: அமைச்சா் சு.முத்துசாமி

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் தண்ணீா் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள இடங்களில் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.இது தொடா்பாக அவா் செய்திய... மேலும் பார்க்க