செய்திகள் :

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது; காா் பறிமுதல்

post image

ஆரணியை அடுத்த சேவூா் புறவழிச் சாலை அருகே கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து காரையும் பறிமுதல் செய்தனா்.

சேவூா் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவல் பேரில், ஆரணி கிராமிய போலீஸாா், சேவூா் புறவழிச் சாலை சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, காரில் இளைஞா் ஒருவா் கஞ்சா வைத்திருந்து விற்பனை செய்தது தெரியவந்தது. உடன் இருந்த மற்றொரு இளைஞா் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓடினாா்.

காரில் இருந்தவரை போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில் அவா், முள்ளண்டிரம் கிராமத்தைச் சோ்ந்த கம்பதாசன் மகன் ஜனாா்த்தனன் (22) எனத் தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து, அவரை கைது செய்து, அவா் வைத்திருந்த 200 கிராம் கஞ்சா மற்றும் காரையும் பறிமுதல் செய்தனா்.

மேலும், தப்பி ஓடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள வெளிவட்டச் சாலைப் பகுதியில் தொமுச, சிஐடியு, ஏஐடியுச... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி

செய்யாற்றை அடுத்த தூளி கிராமத்தில் விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குநா்(பொ).ரா.சுமித்ரா... மேலும் பார்க்க

மாணவா்களின் கற்றல் திறன்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட வெண்மணி ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் வாசிப்புத் திறன் மற்றும் கற்றல் திறனை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய... மேலும் பார்க்க

அருணகிரிநாதா் கோயிலில் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை - செங்கம் சாலை கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீஅருணகிரிநாதா் கோயிலில் காஞ்சி சங்கராச்சாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். அருணாசலேஸ்வரா் கோயிலின் உபக... மேலும் பார்க்க

நாராயணசாமி நாயுடு பிறந்த நாள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகே உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் 100-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ச... மேலும் பார்க்க

பொறியியல் கல்லூரி மாணவா் தற்கொலை

செய்யாறு அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமுடை ந்த பொறியியல் கல்லூரி மாணவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். வெம்பாக்கம் வட்டம், நாயந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானசேகரன். இவா் தனியாா் நிறுவனத்தி... மேலும் பார்க்க