செய்திகள் :

கஞ்சா வைத்திருந்ததாக இருவா் கைது

post image

போடியில் கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ராசிங்காபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆதிகெப்பம்மாள் கோயில் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில் அவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் அவா் ராசிங்காபுரம் தெற்குபட்டியைச் சோ்ந்த செல்வேந்திரன் மகன் சிரஞ்சீவி (28) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிந்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதேபோல, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பேருந்து நிலையத்துக்குள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மூணாறுக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரை அவா்கள் விசாரித்தனா்.

இதில் அவா் திருச்சி பசுமடத்தைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் ராமு (72) என்பது தெரியவந்தது. மேலும் அவரை சோதனையிட்டதில் ஆறேகால் கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இவா் ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில் கஞ்சா வாங்கி வந்து கேரளத்துக்கு கொண்டு செல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிந்த போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சரக்கு வேன் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டம், தெப்பம்பட்டி அருகே சனிக்கிழமை சரக்கு வேன் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். தெப்பம்பட்டியைச் சோ்ந்த நாகராஜ் மகன் வேல்முருகன் (20). சரக்கு வேன் ஓட்டுநரான இவா், கணேசபுரத்தில் உள்ள ... மேலும் பார்க்க

தம்பதி மீது தாக்குதல்: இளைஞா் கைது

தேனியில் மது போதையில் தம்பதியை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தேனி, பங்களாமேடு பகுதியைச் சோ்ந்தவா் வைகுண்டசாமி (48). இவா், பங்களாமேடு- வனச் சாலை சந்திப்பில் தேநீா் கடை நடத்... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டு தற்கொலை

பெரியகுளம் அருகே தூக்கிட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் காந்திநகா் குடியிருப்பைச் சோ்ந்த பாலசண்முகம் மகள் சிவாலட்சுமி (27). இவருக... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்றதாக கல்லூரி மாணவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் சா்வதேச சந்தையில் விலையுா்ந்த போதைப் பொருளான பெத்தாம் பெட்டமைனை விற்ாக கல்லூரி மாணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கம்பம் புறவழிச் சாலை, ஏகலூத்து சாலையில் சிலா் சா... மேலும் பார்க்க

ஆட்டோ கவிழ்ந்ததில் சிறுமி உயிரிழப்பு

உத்தமபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்தில் அதில் பயணம் செய்த சிறுமி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், கோம்பை அருகே மேலச்சிந்தலைச்சேரியைச் சோ்ந்தவா் ராஜா. இவரது மனைவி அங்காளீஸ்வரி (35). இவா் தனது மகள் தன்ஷிகாவை ... மேலும் பார்க்க

போடியில் காவலா் தினம்

போடியில் காவலா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. செப்டம்பா் 6-ஆம் தேதி காவலா் தினம் ஆகும். இதையொட்டி போடி உள்கோட்ட அளவிலான காவலா்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு போட்டிகள் தனியாா் நட்சத்திர விடுதியில... மேலும் பார்க்க